பக்கம் எண் :

 51. திருச்சோபுரம்649


புகழ்ந்து ஓதியனவும் எக்காலத்தும் ஓதத்தக்கனவும் ஆகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர், உண்மைத் தவமுடையோர் விரும்பும் நிலை பெற்ற, சோதி வடிவான ஈசனோடு மன்னியிருப்பர்.

கு-ரை: இப்பாடல் பத்தும் வல்லார் இறைவனோடு ஒன்றி இருப்பார் என்கின்றது. பொன்னி நாடன் - காவிரிநாட்டிற்பிறந்தவன். மன்னு சோதி - நிலைபெற்ற சோதி வடிவானவன்.

விளத்தொட்டிப் புராணம்

மருங்கலை யுடுத்த காழி வாவியொண் கரைமே னின்று
பெருங்கலை சிறிதுந் தேராப் பித்தனை யழுத ழைத்தாங்
கருங்கலை யனைத்தும் பெற்ற வாண்டகை யடியே நெஞ்சக்
கருங்கலை யுருக்கி யாட்கொள் கவுணியன் மலர்த்தாள் போற்றி.

- மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

கோயிலூர்ப் புராணம்

அருமறை யேச மென்ற தமையுமென் றுணர்த்தல் போல
வொருமறை யவன்மால் சுட்டி யுணர்தரா வொன்றைச்சுட்டித்
திருமறை யவனுங் காணச் சிறந்ததொரு விரலாற் காட்டும்
பெருமறை முழங்குங் காழிப் பிள்ளைதாள் சென்னி சேர்ப்பாம்.

- மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

ஒழுவிலொடுக்கம்

வேதாக மப்பவுரி வீசுங் களாசநிலை
யாதார வெற்பி லபிடேகம் - போதத்
திருளிலெழு பாநு வெனதொழிவி லின்பக்
கருணைபொழி வானெடுத்த கை.

- கண்ணுடைய வள்ளலார்.