பக்கம் எண் :

 52. திருநெடுங்களம்657


ஞாலமிக்க தண்டமிழான்

ஞானசம்பந்தன் சொன்ன

கோலமிக்க மாலைவல்லார்

கூடுவர்வா னுலகே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

கு-ரை: இம்மாலை வல்லவர்கள் வானுலகைக் கூடுவர் எனத் திருக்கடைக்காப்பு அருளுகின்றது; கோலம் - அழகு.

காஞ்சிப் புராணம்

பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம்

பழனஞ்சூழ்ந்த

சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத்

தேய மெல்லாம்

குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்தங்

குலதீ பத்தை

விரவியெமை யாளுடைய வென்றிமழ விளங்களிற்றை

விரும்பி வாழ்வாம்.

- சிவஞான யோகிகள்.

தனியூர்ப் புராணம்

தண்மைதன் மட்டு மாகத் தாழ்ந்தொரு முனிபா லேற்ற
வண்மைமந் திரத்தாற் பாலை கடந்தமா னாணங் கொள்ள
உண்மையாய் மலர்ந்து மண்ணுள் ளளவுமற் றொன்றா காம
லெண்மையிற் பாலைநெய்த லியற்றினோன் சரணஞ் சார்வாம்.

- மீனாட்சிசுந்தரம் பிள்ளை.