காஞ்சிப் புராணம்
பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம்
பழனஞ்சூழ்ந்த
சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத்
தேய மெல்லாம்
குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும்
கவுணியர்தங்
குலதீ பத்தை
விரவியெமை யாளுடைய வென்றிமழ விளங்களிற்றை
விரும்பி வாழ்வாம்.
- சிவஞான யோகிகள்.
தனியூர்ப் புராணம்
தண்மைதன் மட்டு மாகத் தாழ்ந்தொரு முனிபா
லேற்ற
வண்மைமந் திரத்தாற் பாலை கடந்தமா னாணங்
கொள்ள
உண்மையாய் மலர்ந்து மண்ணுள் ளளவுமற்
றொன்றா காம
லெண்மையிற் பாலைநெய்த லியற்றினோன் சரணஞ் சார்வாம்.
- மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
|