மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
றுடையீ ரேயுமை யுள்கியே. 2
593. பையா ரும்மர வங்கொடு வாட்டிய
கையா னென்று வணங்குவர்
மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற
ஐயா நின்னடி யார்களே. 3
594. சால மாமலர் கொண்டு சரணென்று
மேலை யார்கள் விரும்புவர்
மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
நீல மார்கண்ட நின்னையே. 4
__________________________________________________
ராய்க் காலை, மாலை இருபோதும்
உம்மைத் தலைவராக எண்ணி அடியவர் அடைகின்றனர்.
கு-ரை: மாற்பேறரே உம்மை எண்ணி
அடியார்கள் மாலை முதலியவற்றை ஏந்தி இருபோதும்
அடைகின்றார்கள் என்கின்றது. தொடை - மாலை.
இருபோதும் - காலையும் மாலையும்.
3. பொ-ரை: கருநிறம் பொருந்திய
நஞ்சை உண்டு தேவர்களைக் காத்தருளிய
நீலகண்டராய்த் திருமாற்பேற்றில்
வீற்றிருக்கின்ற் தலைவரே, உம் அடியவர்கள் படம்
பொருந்திய பாம்பைப் பிடித்து ஆட்டும் கைகளை
உடையவர் என்று உம்மை வணங்குவார்கள்.
கு-ரை: நின்னடியார்கள் நின்னை
அரவமாட்டிய கையான் என்று வணங்குவார்கள்
என்கின்றது. பை - படம். மை - கருமை.
4. பொ-ரை: திருமால் வழிபாடு செய்து
அருள் பெற்றதால் திருமாற்பேறு என வழங்கும்
இத்தலத்தில் விளங்கும் நீலநீறம் பொருந்திய
கண்டத்தை உடையவரே, நும்மை மேன்மை மிக்க
பெரியோர்கள் மிகுதியான நறுமலர்களைக்கொண்டு
அர்ச்சித்து உம்மையே சரண் என்று விரும்பி
வழிபடுவர்.
கு-ரை: நீலகண்ட, உயர்ந்தோர்கள்
மலர்கொண்டு நின்னை வழிபடுவார்கள் என்கின்றது.
சால - மிக. மேலையோர்கள் - உயர்ந்தோர்கள்
மாலினார் வழிபாடுசெய் மாற்பேறு என்றது இத்தல
வரலாற்றுக் குறிப்பு.
|