595. மாறி லாமணி யேயென்று வானவர்
ஏற வேமிக வேத்துவர்
கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்
நீற னேயென்று நின்னையே. 5
596. உரையா தாரில்லை யொன்றுநின் றன்மையைப்
பரவா தாரில்லை நாள்களும்
திரையார் பாலியின் றென்கரை மாற்பேற்
றரையா னேயரு ணல்கிடே. 6
* * * * * * * 7
597. அரச ளிக்கு மரக்க னவன்றனை
உரைகெ டுத்தவ னொல்கிட
__________________________________________________
5. பொ-ரை: உமையம்மையை ஒரு
கூற்றாகக் கொண்டவரே, விளங்கும்
திருமாற்பேற்றில் வெண்ணீறு பூசி விளங்குபவரே,
ஒப்பற்ற மாணிக்கமணியே என்று உம்மையே வானவர்
மிகமிக ஏத்தி மகிழ்வர்.
கு-ரை: நின்னைத் தேவர்கள்
மாறிலாமணியே என்று ஏத்துவர் என்கின்றது. சில
ரத்தினங்களை அணிந்தால் தீமையும் செய்யக்
கூடும்; இந்தமணி எத்தகையோர்க்கும் இன்பமே
செய்தலின் மாறிலாமணியே என்றார். ஏறவே - மிக.
தாமுயர என்றுமாம்.
6. பொ-ரை: அலைகள் பொருந்திய
பாலியாற்றின் தென்கரையில் விளங்கும்
திருமாற்பேற்றில் விளங்கும் அரசனே, பொருந்திய
நின் பெருந்தன்மையை வியந்து உரையாதார் இல்லை.
நாள்தோறும் உன் பெருமைகளைப் பரவாதவர் இல்லை.
அருள் நல்குவீராக.
கு-ரை: திருமாற்பேற்று அரைசனே,
உன்னைப் புகழாதாரும், பரவாதாரும் இல்லை
என்கின்றது. இத்தல பாலியாற்றுத் தென்கரையது
என்பது குறிக்கப்பெறுகின்றது.
7. * * * * *
8. பொ-ரை: இலங்கை நாட்டை ஆளும்
இராவணனின் புகழை மங்கச் செய்து, பின் அவன் பிழை
உணர்ந்து வேண்டிய அளவில்
|