திருக்குடந்தைப் புராணம்
காலமே கருத்தா வென்று கரைபவ ரூம ராகக்
கோலமே பொலியுங் கொங்கிற் கொடும்பனிக்
காலத் தீமை
சாலமே வியது ணர்ந்து தவிர்த்துமா தேவன்
சீர்த்தி
ஞாலமேல் விரித்த காழி நாடனைப் பாடி
வாழ்வாம்.
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
மயூரகிரி புராணம்
அம்பிகைதன் முலைப்பாலில் அறிவுகுழைத்(து)
உண்டபிரா னழகார் சோம
விம்பமெனு மலர்முகத்தான் திருமருகல்
வணிகப்பெண் விடந்தீர்த் தாண்டோன்
அம்புகின்ற சைவரெலா மீடேறச்
சமணர்கழு நண்ணச் செய்த
உம்பர்பிரான் திருநீற்றான் சம்பந்தன்
இணையடிக ளுளத்துள் வைப்பாம்.
- வேதாந்த சுப்பிரமணியர்.
|