602. நல்லா ரும்மவர் தீய ரெனப்படும்
சொல்லார் நன்மலர் சூடினார்
பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை
எல்லா ருந்தொழு மீசரே. 2
603. விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
எண்ணார் வந்தெ னெழில்கொண்டார்
பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
உண்ணா ணாளு முறைவரே. 3
604. பூவுந் திங்கள் புனைந்த முடியினார்
ஏவி னல்லா ரெயிலெய்தார்
__________________________________________________
2. பொ-ரை: பற்கள் பொருந்திய
வெண்மையான தலையோட்டை அணிந்தவரும்,
எல்லாராலும் தொழப்படுபவருமாகிய எம்
திருப்பாற்றுறைச் செல்வராகிய ஈசர், நல்லவருக்கு
நல்லவராவர். தீயை ஏந்தியதால் தீயர் எனவும்
படுவார். அவர் நல்ல மலரைச் சூடியவர்.
கு-ரை: இவர் நல்லவரும் ஆவர்; தீயர்
எனவும் சொல்லப் பெறுவர்; ஆயினும் எனது
சொன்மலரைச் சூடினார் என்கின்றது. தீயர் -
கையில் தீயையுடையவர். சொல் ஆர் நன் மலர் -
சொல்லாகிய நிறைந்த நல்லமலர்கள்; என்றது,
தலைவி பேசுவன யாவும் அவன் புகழேயாதல்
தெரிவித்தது. எல்லாரும் தொழும் - பரிபாகமுடையவர்
அஃதில்லாத உலகவர் யாவரும் வணங்கும்.
3. பொ-ரை: இயற்கையில் பண்ணிசை
போல முரலும் வண்டினங்கள் பாடும்
திருப்பாற்றுறையுள் எக்காலத்தும் உறைபவரும்,
விண்ணகத்தே தவழும் திங்கள் விளங்கும்
திருமுடியினரும் ஆகிய இறைவர் என் இதயத்தில்
இருப்பவராய் வந்து என் எழில்நலம் அனைத்தையும்
கவர்ந்தார்.
கு-ரை: திருமூலநாதர் ஆராயாதே வந்து
என்னழகெல்லாவற்றையும் கவர்ந்தார் என்கின்றது.
எண்ணார் - எண்ணத்தில் இருப்பவர். இது உறுப்பு
நலனழிதல் என்னும் மெய்ப்பாடு. பாற்றுறையுள்
நாள்நாளும் உறைவர் எனப் பிரித்துப்
பொருள்காண்க.
4. பொ-ரை: மூழ்கியவருடைய
பாவங்களைப் போக்கும் தீர்த்த நலம் உடைய
திருப்பாற்றுறையுள் மலர்களையும் பிறைமதியையும்
|