பக்கம் எண் :

692திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


611. பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரனைப்
பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ்
பத்தும் பாடிப் பரவுமே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

தலைவியுமாய் இருந்து அநுபவிக்கும் அருள்நெறி முதிர்ச்சியால் என அறிக. வரும் தோணிபுரப் பதிகத்தும் இக்காட்சியைக் காண்க.

11. பொ-ரை: அடியவர்கள் நிறைந்துள்ள திருப்பாற்றுறையுள் எழுந்தருளிய ஆயிரம் திருநாமங்களையுடைய இறைவனை, பக்தனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இனிய தமிழ்ப் பாடல்களாகிய இப்பத்தையும் பாடிப் பரவுமின்.

கு-ரை: பாற்றுறைநாதரைப் பற்றிய இப்பாடல் பத்தையுஞ் சொல்லிப் பரவுங்கள் என்கின்றது. பத்து நூறு பெயரன் - ஆயிரந் திருநாமத்தையுடையவன்.

திருப்புகழ்

எதிரி லாதபத்தி தனைமேவி

இனிய தாள்நினைப்பை இதுபோதும்

இதய வாரிதிக்குள் உறவாகி

எனது ளேசிறக்க அருள்வாயே

கதிர காமவெற்பில் உறைவோனே

கனக மேருஒத்த புயவீரா

மதுர வாணியுற்ற கழலோனே

வழுதி கூன்நிமிர்த்த பெருமாளே.

- அருணகிரிநாதர்.