616. காட்டினாலு மயர்த்திடக் காலனை
வீட்டி னானுறை வேற்காடு
பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்
ஓட்டி னார்வினை யொல்லையே. 5
617. தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
வேலி னானுறை வேற்காடு
நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
மாலி னார்வினை மாயுமே. 6
618. மல்லன் மும்மதின் மாய்தர வெய்ததோர்
வில்லி னானுரை வேற்காடு
_______________________________________________
5. பொ-ரை: மார்க்கண்டேயர், சிவனே
முழுமுதல்வன் எனக் காட்டினாலும் அதனை உணராது
மயங்கி அவர் உயிரைக் கவர வந்த அக்காலனை
அழித்த சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப்
பாடல்கள் பாடிப் பணிந்து வழிபட வல்லவர்
தம்வினைகளை விரைவில் ஓட்டியவர் ஆவர்.
கு-ரை: இது பாடிப்பணிந்து
ஏத்தவல்லவர் வினை ஓடும் என்கின்றது.
காட்டினாலும் அயர்த்திடு அக்காலனை
மார்க்கண்டேயர் பூசித்து, சிவன் முழுமுதல்வன்
என்பதைக் காட்டினாலும் அதனை உணராதே மயங்கிய
காலனை. வீட்டினான் - அழித்தவன். ஒல்லை - விரைவு.
காட்டினானும் என்ற பாடமும் உண்டு.
6. பொ-ரை: தான் கட்டியும்
போர்த்தும் உள்ள ஆடைகளைத் தோலினால்
அமைந்தனவாகக் கொண்டுள்ள இறைவன் ஒளி
பொருந்திய வேலோடு உறையும் திருவேற்காட்டை, ஆகம
நூல்களில் விதித்தவாறு வழிபட்டுத் துதிக்க
வல்லவர்களாகிய ஆன்மாக்களைப் பற்றிய மயங்கச்
செய்யும் வினைகள், மாய்ந்தொழியும்.
கு-ரை: விதிப்படி ஏத்தவல்லவர்க்கு
வினைமாயும் என்கின்றது நூலினால் - ஆகம விதிப்படி
மாலினார் வினை - மயங்கிய ஆன்மாக்களினது வினை.
7. பொ-ரை: வளமை பொருந்திய
முப்புரங்களும் அழிந்தொழியுமாறு கணை எய்த
ஒப்பற்ற மேரு வில்லை ஏந்திய சிவபிரான்
|