சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே. 7
619. மூரல் வெண்மதி சூடுமுடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வார மாய்வழி பாடுநி னைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே. 8
620. பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
விரக்கி னானுறை வேற்காட்டூர்
அரக்க னாண்மை யடரப்பட் டானிறை
நெருக்கி னானை நினைமினே. 9
_______________________________________________
உறையும் திருவேற்காட்டைப் புகழ்ந்து
சொல்ல வல்லவர்கள் சுருங்கா மனத்தினராவர்.
அங்குச் சென்று தரிசிக்க வல்லவர் நீண்ட ஆயுள்
பெறுவர்.
கு-ரை: இறைவனை எப்பொழுதும் பேசவல்ல
குவியாமனத்து அடியவர்கள் நீடுவாழ்வர் என்கின்றது.
தீர்க்கம் - நெடுங்காலம்.
8. பொ-ரை: மிக இளைய வெண்மையான
பிறைமதியைச் சூடும் திருமுடியை உடைய வீரனாகிய
சிவபிரான் எழுந்தருளியுள்ள திருவேற்காட்டை,
அன்போடு வழிபட நினைந்தவர். அப்பெருமானின்
சிவந்த திருவடிகளைத் திண்ணமாகச் சேர்வர்.
கு-ரை: அன்போடு வழிபடுவார் அடி
அடைவர் என்கின்றது மூரல் - இளமை. வாரம் - அன்பு.
9. பொ-ரை: பிரமனின் தலையோட்டில்
பலியேற்கின்ற சமர்த்த னாகிய சிவபிரான்
உறையும் திருவேற்காட்டில் அரக்கன் ஆகிய
இராவணனின் ஆண்மையை அடர்த்துக் கால்விரலால்
சிறிதே ஊன்றி நெருக்கிய அவனை நினைமின்கள்.
கு-ரை: இராவணனது ஆண்மையை அடர்த்த
இறைவனை நினையுங்கள் என்கின்றது. பரக்கினார் -
உலகில் தன் படைப்பால் உயிர்களைத் தனு கரண புவன
போகங்களோடு பரவச் செய்தவராகிய
|