பக்கம் எண் :

 58. திருக்கரவீரம்697


621. மாறி லாமல ரானொடு மாலவன்
வேற லானுறை வேற்காடு
ஈறிலாமொழி யேமொழி யாவெழில்
கூறி னார்க்கில்லை குற்றமே. 10

622. விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம் பந்தன் செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே. 11

_______________________________________________

திருச்சிற்றம்பலம்

பிரமனார். விரக்கினான் - சாமர்த்தியமுடையன். விரகினான் என்பது எதுகை நோக்கி விரிந்தது.

10. பொ-ரை: ஒப்பற்ற தாமரை மலர் மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியவர்களை வெற்றி கொள்வானாகிய சிவன் உறையும் திருவேற்காட்டு இறைவனைப் பற்றிய மொழியை ஈறிலா மொழியாக, அப்பெருமானுடைய அழகிய நலங்களைக் கூறுபவர்களுக்குக் குற்றமில்லை.

கு-ரை: இறைவனைப்பற்றிய மொழியே ஈறிலாமொழியாக அதனை அழகுபெறக் கூறினார்க்குக் குற்றமில்லை என்கிறது. வேறலான் - வெல்லுதலையுடையான். வேறாகாதவன் எனலுமாம்.

11. பொ-ரை: விரிந்த மலர்களையுடைய மாஞ்சோலைகள் சூழ்ந்த திருவேற்காட்டை அடைந்து, அங்கெழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவி, சீகாழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகச் செந்தமிழ் கொண்டு பாடிப் போற்றுவார்க்கு நன்மைகள் விளையும்.

கு-ரை: திருவேற்காட்டைத் தரிசித்து இறைவன் திருவடியைத் தியானித்து இப்பதிகத்தைப் பாடக் குணமாம் என்கின்றது. விண்ட - மலர்ந்த சண்பை சீகாழிக்கு மறுபெயர்.