665. செடிநுகருஞ் சமணர்களுஞ்
சீவரத்த சாக்கியரும்
படிநுகரா தயருழப்பார்க்
கருளாத பண்பினான்
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க்
கருள்செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான்
கணபதீச் சரத்தானே. 10
__________________________________________
ஓங்கி நின்றவன் இவ்வுலகில்
சிற்றம்பலத்திலும் தேனூரிலும் கானூரிலும்
கழுமலத்திலும் விளங்குபவன். அவ்விறைவன்
திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில்
எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: அவன் ஏறுவதுவிடை; இடம் வான்,
வையகம், வாழ்த்துவார் மனம், தேனூர் கானூர்
முதலியன என்கின்றது.
ஆன் ஊரா ஊழி தருவான் - இடபத்தை ஏறிச்
சுற்றுவான். இருவர் - அயனும் மாலும். வானூரான் -
விண்ணிடமாக ஓங்கி வளர்ந்தவன். இங்ஙனம்
புறத்தானே எனினும் வாழ்த்துவார்
மனத்தகத்துள்ளான்.
10. பொ-ரை: முடைநாற்றத்தை
நுகரும்சமணர்களும், காவியாடை கட்டிய புத்தர்களும்
எம்பெருமானுடைய இயல்புகளை அறிந்துணராது
துன்புறுபவர்கள், அவர்கட்கு அருள்புரியாத
இயல்பினனாகிய சிவபிரான் திருநீற்று மணத்தையே
நுகரும் சிறுத்தொண்டர்க்கு அருள்செய்யும்
பொருட்டுத் திருச்செங்காட்டங்குடியை விளக்கிய
தலமாகக் கொண்டு அங்குள்ள கணபதீச்சரத்தில்
எழுந்தருளியுள்ளான்.
கு-ரை:
புறச்சமயத்தார்க்கிருளாயிருப்பவன்
சிறுத்தொண்ட நாயனார்க்கருள் வழங்க இந்நகரில்
எழுந்தருளியிருக்கின்றான் என்கின்றது.
செடி - நாற்றம். சீவரம் - காவியாடை.
படிநுகராது - பூமியின் கண் நுகரத்தகுவன நுகராதே, அயர்
உழப்பார் - துன்பத்தைத் தாமே தேடிக்கொண்டு
வருந்துபவர்கள். பொடி - விபூதி, கடி நகர் - காவல்
நகரம்.
|