715. மொய்வல்லசுரர் தேவர்கடைந்த
முழுநஞ் சதுவுண்ட
தெய்வர்செய்ய வுருவர்கரிய
கண்டர் திகழ்சுத்திக்
கையர்கட்டங் கத்தர்கரியி
னுரியர் காதலாற்
சைவர்பாசு பதர்கள்வணங்குஞ்
சண்பை நகராரே. 4
716. கலமார்கடலுள் விடமுண்டமரர்க்
கமுத மருள்செய்த
குலமார்கயிலைக் குன்றதுடைய
கொல்லை யெருதேறி
__________________________________________________
கு-ரை: மன்மதனை எரித்து, அவன்
மனைவியாகிய இரதிக்கு அருள் செய்தவன் சண்பையான்
என்கின்றது. மகரத்து ஆடு கொடியோன் - மகர மீன்
எழுதிய வெற்றி பொருந்திய கொடியுடையோன். நிகர்
ஒப்பு: ஒருபொருட் பன்மொழி. தேவி என்றது இரதியை.
அவளுக்கு மட்டும் மன்மதனை எழுப்பித் தந்ததை உணர்த்துவது.
தாரா - சிறுநாரை. பகன்றில் - அன்றில். தகரப்புன்னை
- தகரமும் புன்னையும்.
4. பொ-ரை: அன்போடு சைவர்களும்
பாசுபதர்களும் வழிபடும் சண்பை நகர் இறைவர். வலிமை
செறிந்த அசுரர்களும் தேவர்களும் கடலைக் கடைந்தபோது
எழுந்த நஞ்சு முழுவதையும் உண்டருளிய தெய்வமாவார்.
அவர் சிவந்த திருமேனி உடையவர். கருநிறம் பொருந்திய
கண்டத்தினர். சுத்தியைக் கொண்டகையினர். மழுவினர்
- யானைத் தோலைப் போர்த்தியவர்.
கு-ரை: நஞ்சமுது செய்த தெய்வர், செய்யர்,
கண்டங்கரியர், சுத்திக்கையர், மழுப்படையர் சண்பைநகரார்
என அடையாளம் அறிவிக்கின்றது. கட்டங்கம் - மழு,
சுத்தி - திருநீறு கொடுப்பதற்குத் தலையோட்டினால்
இப்பிவடிவமாகச் செய்யப்பட்டது.
5. பொ-ரை: மக்கட்கு நன்மை தரும்
மரமாகிய தென்னையிலிருந்து வெண்மை நிறத்தோடு
வெளிவரும் மணம் மிக்க பாளை கபடம் மிக்க யானையின்
மருப்புப் போலத் தோன்றும் சோலை வளம்
|