பக்கம் எண் :

78முதல் திருமுறையின் உரைத்திறம்(முதல் திருமுறை)


10-5. உரவம் - உரகம் என்பதன் திரிபு.

17-5. குன்று என்பது குன்றளூர் என்பதன் மரூஉ. எந்தாய் - எம் தாய் என்பதன் அண்மை விளி; எந்தை என்பதன் விளி. எனவே எந்தாய் என்பது தாயாகவும் தந்தையாகவும் உள்ள இறைவனை விளித்தவாறு.

55-10. கொள்ளேலும் - முன்னிலைப் பன்மை எதிர்மறை ஏவல் இஃது அருவழக்கு.

89-6. அயம்பெய்ய - அயம் - ஐயம் என்பதன் போலி.

103-4. துணையல், பிணையல், இணையல், கணையல் - நான்கினும் அல் சாரியை.

117-3. ஏ விளங்கும் நுதல் - ஏ - அம்பு. அது வில்லைக் குறித்தது ஆகுபெயர்.

இத்தகைய இலக்கணக் குறிப்புக்கள் இன்னும் சில உள.

12. செய்யுள் முடிபு முதலியன:

ஆற்றொழுக்காகப் பொருள் செய்ய இயலாத சில பாடல்களில் உள்ள சொற்றொடர்களைப் பிரித்துத் தனித்தனியே கூட்டிப் பொருள் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அத்தகைய இடங்களை இவ்வுரையாசிரியர் விளக்கியுள்ளார்.

6-5. பாடலும் முழவும் விழாவும் இடையறாத மருகல் எனவும், மறையோர் பரவ நிலாவியமைந்த எனவும், கொடிதடவும் மருகல் எனவும் இயைத்துப் பொருள் காண்க.

32-5. வண்டு புகுந்து ஈண்டி, செம்மை உடைத்தாய் இருக்க, பூசம்புகுந்து ஆடி அழகாய ஈசன் உறைகின்ற இடைமருது என வினை முடிபு செய்க.

32-9. மால்நயந்து ஏத்த எனப்பிரிக்க. உறைகின்ற இடை மருது ஈதோ எற்றே எனக் கூட்டுக.

77-1. குன்று இரண்டு அன்னதோள் எனவும், அன்று இரண்டு