திருஞானசம்பந்தர் புராணம்
அங்கண்வட திசைமேலும்
குடக்கின் மேலும்
அருந்தமிழின் வழக்கங்கு நிகழா
தாகத்,
திங்கள்புனை முடியார்தந் தானந் தோறும்
சென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல,
மங்கையுடன்
வானவர்கள் போற்றி சைப்ப
வீற்றிருந்தார்
வடகயிலை வணங்கிப் பாடிச்,
செங்கமல மலர்வாவித்
திருக்கே தாரம்
தொழுதுதிருப் பதிகஇசை திருந்தப்
பாடி.
- சேக்கிழார். |