பக்கம் எண் :

80முதல் திருமுறையின் உரைத்திறம்(முதல் திருமுறை)


35-1. விரிகோவணம் - ‘அற்றம் மறைப்பது முன்பணியே’ - 3-371-1.

‘ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்கும்மே’ - தேவாரம்.

43-1. ஒருமாதைத் தலையிலும் ஒருமாதைப் பாகத்திலும் வைத்தும் கற்குடியார் பிரமசாரியே. ‘பவன் பிரமசாரியாகும்’.

52-7. மூன்றும் ஒன்றாகக் கூட்டி ஓர் வெங்கணையால்.

எரி காற்று அரிகோல் - 1-11-6.

65-3. அயம் சேர்புணரி - அயம் - பள்ளம். அயம்இழி அருவி கலி - 46.

57-4. தாழ்வுடை மனம் - பணிந்த உள்ளம்

தாழ்வு எனும் தன்மை (சித்தியார்)

60-3. கண்பு அகத்தின் - சம்பங்கோரையின் நடுவில்.

‘களிறுமாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர’ (மதுரைக்-122.)

இவ்வுரையில் மிகத்தேவைப்பட்ட இடத்தன்றிப் பண்டை நூல் மேற்கோள்கள் இடம் பெற்றில.

14. வடமொழிச் சார்பு;

கர்ணாவதம்சம் (2-1) க்ருஷ்ண மிருகம் (2-1) அரிஷட்வர்க்கம் (21-5) அணோரணியான் மஹதோர் மஹீயான் - (61-6) முதலிய வடசொற்றொடர்கள் உரையில் விரவி வருகின்றன. ரத்நம், ஸ்பரிசம், ரூபம் முதலிய தனிச் சொற்களும் பயில்கின்றன. முதல் திருப்பாடல் உரையிலும், 22-7 உரையிலும் வடநூல் மேற் கோள்கள் காட்டப்பட்டுள்ளன. உரை ஆசிரியர் வடமொழியும் பயின்றவர் ஆதலின் இன்னோரன்ன அவர் உரையுள் இடம் பெற்றுள்ளன.