பண்ணிடையொன்பது
முணர்ந்தவர்பத்தர்
பாடிநின்றடிதொழ மதனனைவெகுண்ட
கண்ணிடைக்கனலினர் கருதியகோயில்
கழுமலநினையநம் வினைகரிசறுமே. 3
856. எரியொருகரத்தின
ரிமையவர்க்கிறைவ
ரேறுகந்தேறுவர் நீறுமெய்பூசித்
திரிதருமியல்பின ரயலவர்புரங்க
டீயெழவிழித்தனர் வேய்புரைதோளி
வரிதருகண்ணிணை மடவரலஞ்ச
மஞ்சுறநிமிர்ந்ததோர்
வடிவொடும்வந்த
கரியுரிமருவிய வடிகளுக்கிடமாங்
கழுமலநினையநம் வினைகரிசறுமே. 4
____________________________________________________
ஒன்றாய இசைத்துறையில் ஒன்பான்
கலையையும் உணர்ந்தவர். பக்தர்கள் பாடி நின்று
திருவடிகளை வணங்க வீற்றிருப்பவர். மன்மதனைக்
கண்ணிடைத் தோன்றிய கனலால் வெகுண்டவர்.
அத்தகைய பெருமான் விரும்பி உறையும்
கழுமலத்திலுள்ள கோயிலை நினைய நம் வினைகளின்
தீமை முற்றிலும் நீங்கும்.
கு-ரை: எண்ணிடை ஒன்றினர் -
எண்ணத்தில் அருவாயிருக்கும் பொழுது ஒன்றாய்
இருப்பவர். உருவம் இரண்டினர் - சிவமும்
சத்தியுமாகி உருவத் திருமேனி கொள்ளுங்காலத்து
இரண்டாய் இருப்பவர். எரியிடை மூன்றினர் -
நெருப்பில் சத்தமும் ஸ்பரிசமும் உருவமுமாகிய மூன்று
தன்மாத்திரைகளாய் இருப்பவர். ஆகவனீயம் முதலிய
முத்தீயாய் இருப்பவர் என்றலுமாம். மண்ணிடை
ஐந்தினர் - மண்ணில் சத்தம், ஸ்பரிசம், ரூபம்,
ரசம், கந்தம் ஆகிய ஐந்து தன்மாத்திரைகளாய்
இருப்பவர். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம்,
நெய்தல் என்ற ஐந்திணையாய் இருப்பவர் எனலுமாம்
ஏழிசை - குரல், கைக்கிளை, துத்தம், இழை, இளி,
விளரி, தாரம் என்ற ஏழு. எட்டிருங்கலை -
அஷ்டவித்தை.
4. பொ-ரை: ஒருகரத்தில் எரி
ஏந்தியவர். தேவர்கட்குத் தலைவர். விடையை
விரும்பி ஊர்பவர். திருநீற்றை மெய்யிற் பூசித்
திரியும் இயல்பினர். பகைமை பூண்டவர்களாய
அசுரர்களின் மூன்று புரங்களும் தீயில் அழியுமாறு
விழித்தவர். மூங்கில் போன்ற திரண்ட
|