881. வாசங் கமழ்காழி மதிசெஞ்
சடைவைத்த
ஈசன் னகர்தன்னை யிணையில்
சம்பந்தன்
பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ
ருலகத்துப்
பாசந் தனையற்றுப் பழியில்
புகழாரே. 11
திருச்சிற்றம்பலம்
____________________________________________________
11. பொ-ரை: பிறைமதியைச்
செஞ்சடையில் வைத்த சிவபிரானது மணங்கமழ்கின்ற
சீகாழிப் பதியாகிய நகரை, ஒப்பற்ற
ஞானசம்பந்தன் போற்றிப் பேசிய
இத்திருப்பதிகத் தமிழில் வல்லவர்கள் கடல்
சூழ்ந்த இவ்வுலகில் பாசங்களை நீக்கிப் பழியற்ற
புகழோடு வாழ்வர்.
கு-ரை: காழிநகரைப் பற்றிச்
சம்பந்தன் சொன்ன இத்தமிழை வல்லவர்கள் கடல்
புடைசூழ்ந்த உலகத்துப் பாசம் நீங்கிப்
பழியற்றுப் புகழுடையராய் வாழ்வர் எனப் பயன்
கூறுகிறது. பெருநீர் - கடல்.
திருப்புகழ்
சமயபத்தி
விருதாத்தனை
சரணபத்ம
சிவார்ச்சனை
அமையசற்குரு சாத்திர
அருளெனக் கினிமேற்றுணை
உமைமுலைத் தருபாற்கொடு
உரியமெய்த்
தவமாக்கிநல்
தமிழ்தனைக்கரை
காட்டிய
சமணரைக்கழு வேற்றிய |
நினையாதே
தனைநாடி
மொழிநூலால்
தருவாயே
அருள்கூறி
உபதேசத்
திறலோனே
பெருமாளே. |
- அருணகிரி நாதர்.
நால்வர் நான்மணி மாலை
இலைபடர்ந்த
பொய்கை யிடத்தழுதல் கண்டு
முலைசுரந்த வன்னையோ முன்னின் - னிலைவிளம்பக்
கொங்கை
சுரந்தவருட் கோமகளோ சம்பந்தா
விங்குயர்ந்தா ளார்சொல் லெனக்கு.
- சிவப்பிரகாச சுவாமிகள். |
|