பக்கம் எண் :

890திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


881. வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த
ஈசன் னகர்தன்னை யிணையில் சம்பந்தன்
பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப்
பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே. 11

திருச்சிற்றம்பலம்

____________________________________________________

11. பொ-ரை: பிறைமதியைச் செஞ்சடையில் வைத்த சிவபிரானது மணங்கமழ்கின்ற சீகாழிப் பதியாகிய நகரை, ஒப்பற்ற ஞானசம்பந்தன் போற்றிப் பேசிய இத்திருப்பதிகத் தமிழில் வல்லவர்கள் கடல் சூழ்ந்த இவ்வுலகில் பாசங்களை நீக்கிப் பழியற்ற புகழோடு வாழ்வர்.

கு-ரை: காழிநகரைப் பற்றிச் சம்பந்தன் சொன்ன இத்தமிழை வல்லவர்கள் கடல் புடைசூழ்ந்த உலகத்துப் பாசம் நீங்கிப் பழியற்றுப் புகழுடையராய் வாழ்வர் எனப் பயன் கூறுகிறது. பெருநீர் - கடல்.

திருப்புகழ்

சமயபத்தி விருதாத்தனை

சரணபத்ம சிவார்ச்சனை

அமையசற்குரு சாத்திர

அருளெனக் கினிமேற்றுணை

உமைமுலைத் தருபாற்கொடு

உரியமெய்த் தவமாக்கிநல்

தமிழ்தனைக்கரை காட்டிய

சமணரைக்கழு வேற்றிய

நினையாதே
தனைநாடி
மொழிநூலால்
தருவாயே
அருள்கூறி
உபதேசத்
திறலோனே
பெருமாளே.

- அருணகிரி நாதர்.

நால்வர் நான்மணி மாலை

இலைபடர்ந்த பொய்கை யிடத்தழுதல் கண்டு
முலைசுரந்த வன்னையோ முன்னின் - னிலைவிளம்பக்
கொங்கை சுரந்தவருட் கோமகளோ சம்பந்தா
விங்குயர்ந்தா ளார்சொல் லெனக்கு.

- சிவப்பிரகாச சுவாமிகள்.