பக்கம் எண் :

894திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள்
மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே. 6

888. மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான்
கொதியா வருகூற்றைக் குமைத்தா னுறைகோயில்
நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள்
விதியா னிற்கின்றார் வீழி மிழலையே. 7

889. எடுத்தான் றருக்கினை யிழித்தான் விரலூன்றிக்
கொடுத்தான் வாளாளாக் கொண்டா னுறைகோயில்
படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை
விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே. 8

____________________________________________________

இடந்து சாத்திய அளவில் பிறர் சுமக்கலாற்றாத சக்கராயுதம் ஆகிய ஆழியை அவனுக்கு ஈந்தருளிய பெருமான் உறையும் கோயில், சேல்மீன்கள் பொருந்திய செழுநீர்ப் பொய்கைகளில் முளைத்த தாமரை மலர்கள் தீப்பிழப்பு போலக் காணப்படும் திருவீழிமிழலையாகும்.

கு-ரை: திருமால் ஆயிரம் பூவோடு கண்கொண்ட வழிபாடு செய்யச் சக்கரம் ஈந்த பெருமான் கோயில் இது என்கின்றது. இவ் வரலாறு இத்தலத்தில் நிகழ்ந்தது. ஏலாவலயம் - சுமக்கலாற்றாத சக்கரம். கமலங்கள் எரிகாட்டும் - செந்தாமரை தீப்பிழம்பைப் போல விளங்கும்.

7. பொ-ரை: மெய்யறிவால் தன்னை வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாளைக் கையகப் படுத்தச் சினந்து வந்த கூற்றுவனை அழித்த சிவபிரானது கோயில், நிதியால் மிகுந்த செல்வர்கள் நாள்தோறும் செய்யும் நியமங்களை விதிப்படி செய்து வாழும் திருவீழிமிழலையாகும்.

கு-ரை: காலகாலன் கோயில் இது என்கின்றது. மதியால் வழிபட்டான் - அறிவோடு வழிபட்ட மார்க்கண்டன். கொதியா - கோபித்து. குமைத்தான் - உரு அழியச் செய்தவன். நெதியான் மிகுசெல்வர் - தியானத்தால் மிக்க செல்வர். நியமங்கள் - யோக உறுப்புகள் எட்டனுள் ஒன்றாகிய நியமம்.

8. பொ-ரை: கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் செருக்கினைத் தன் கால்விரலை ஊன்றி அழித்தவனும், பின்