பக்கம் எண் :

896திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


892. மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்
ஏனத் தெயிற்றானை யெழிலார்பொழிற்காழி
ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
வாய்மைத் திவைசொல்ல வல்லோர் நல்லோரே. 11

திருச்சிற்றம்பலம்

____________________________________________________

சிரித்துப் பழிதூற்றும் நம் இறைவர் தங்கும் கோயில், தக்கவராய், வேதவேள்விகள் செய்வதில் தலையாயவராய், உலகில் மேம்பட்டவராய் விளங்கும் மறையவர் வாழும் வீழிமிழலை ஆகும்.

கு-ரை: புறச்சமயிகள் புறம்பழிக்கும் நமதிறைவன் கோயில் இது என்கின்றது. சிக்கு ஆர் துவர் ஆடை - சிக்கு நாறும் காவியுடை. தட்டு உடை - ஓலைத்தடுக்காகிய உடை, நக்கு - சிரித்து. அலர் தூற்றும் - பழிதூற்றும். தக்காராய், வேதவேள்வியில் தலையானவராய், உலகுக்கே மிக்கவர்கள் வாழுகின்ற வீழிமிழலை என்க.

11. பொ-ரை: விண்ணிலிருந்து இழிந்து வந்துள்ள வீழிமிழலைக் கோயிலில், பன்றிப்பல் சூடியவனாய் எழுந்தருளி விளங்கும் சிவபிரானை, அழகிய பொழில்கள் சூழ்ந்த காழிப் பதியில் தோன்றிய ஞானத்தால் மேம்பட்ட அழகிய ஞானசம்பந்தன், உண்மையை உடையவனாய் ஓதிய இப்பதிகத்தைச் சொல்ல வல்லவர் நல்லவர் ஆவார்.

கு-ரை: வீழிநாதனைக் காழி ஞானசம்பந்தன் சொன்ன இப்பாடல் பாடவல்லார் நல்லார் என்கின்றது. மேல்நின்று இழி கோயில் - விண்ணிழிகோயில். இது இத்தலத்துச் சிறப்புக்களுள் ஒன்று. ஏனத்து எயிற்றானை - பன்றிக்கொம்பை அணிந்தானை. வாய்மைத்து இவை - உண்மையை உடையனவாகிய இவற்றை.

திருஞானசம்பந்தர் புராணம்

நிறைகுடந் தூபந்தீபம் நீடநிரைத் தேந்தி
நறைமலர்ப் பொற்சுண்ணம் நறும்பொரியுந் தூவி
மறையொலிபோய் வானளப்ப மாமுரசம் ஆர்ப்ப
இறைவர்திரு மைந்தர்தமை எதிர்கொள்வர வேற்றார்.

- சேக்கிழார்.