899. மிளிரும் மரவோடும் வெள்ளைப்
பிறைசூடி
வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய
கிளரும் சடையண்ணல் கேடில் கழலேத்தத்
தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே.
7
900. கொலையார் மழுவோடு கோலச்
சிலையேந்தி
மலையார் புனலம்பர் மாகா ளம்மேய
இலையார் திரிசூலப் படையான் கழனாளும்
நிலையா நினைவார்மே னில்லா
வினைதானே. 8
901. சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட
மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய
____________________________________________________
7. பொ-ரை: விளங்குகின்ற
பாம்போடு வெள்ளை நிறமுடைய பிறையை
முடியிற்சூடி,வளர்கின்ற பொழில்கள் சூழ்ந்த
அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியிருக்கும்,
விளங்குகின்ற சடைமுடியை உடைய தலைமையாளனாகிய
சிவபிரானுடைய குற்றமற்ற திருவடிகளை ஏத்தினால்,
மிக்க நோய்கள் தளர்வுறும்; தவம் நம்மை வந்து
அடையும்.
கு-ரை: மிளிரும் அரவு -
விளங்குகின்ற பாம்பு. அரவுக்கு விளக்கம்
அடியார்கள் அன்போடு அடைக்கலமாக நோக்கும்
இறைவனுடைய திருவடி, கரம், கழுத்து, முடி, செவி,
இவற்றிலெல்லாம் அணியாக இருந்து அடியார்கள்
மனத்தைக் கவர்தல், கேடில்கழல் - அழிந்து
படாத்திருவடி. உறுநோய்கள் தளரும், தவம் சாரும் என
முடிக்க.
8. பொ-ரை: கொல்லும் தொழிலில்
வல்ல மழுவாயுதத்தோடு, அழகிய வில்லையும் கையில்
ஏந்தி, கரையோடும் மோதும் நீர் நிரம்பிய
அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியிருக்கும் இலை
வடிவமான முத்தலைச் சூலத்தைப் படையாகக் கொண்ட
சிவபெருமான் திருவடிகளை நாள்தோறும் நிலையாக
நினைவார்பால் வினைகள் சாரா.
கு-ரை: கொலை ஆர்மழு என்றது
படைக்கலம் என்ற பொதுமை பற்றி வந்த அடை;
இறைவன் மழு யாரையும் கொலை செய்தல்
இல்லையாதலின். கோலச் சிலை - அழகுக்காகத்
தரிக்கப்பட்டவில்.
9. பொ-ரை: சிறகுகளை உடைய வரி
வண்டுகள் தேனுண்டு இசைபாட, வேதம் ஓதும் அந்தணர்
நிறைந்த அம்பர் மாகாளத்தில்
|