பக்கம் எண் :

914திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


வல்ல மழுவைக் கையில் ஏந்திய சிவபிரானை, கொச்சை வயம் என்னும் புகழுடைய தலத்தில் வாழ்ந்த தமிழ் ஞானசம்பந்தன், போற்றிப் பாடிய கலை நலம் வாய்ந்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர், கவலைகள் நீங்கப் பெறுவர்.

கு-ரை: நல்ல நகரானை ஞானசம்பந்தன் சொன்ன கலைகளாகிய இவைகளை வல்லவர்கள் கவலை கழிவார் என்கின்றது. கொச்சை - சீகாழி. இப்பதிகத்தைக் கலைகள் எனச் சிறப்பித்தமை காண்க.

திருஞானசம்பந்தர் புராணம்

நிலவு மாளிகைத் திருநல்லம் நீடுமா மணியை
இலகு சேவடி இறைஞ்சிஇன் தமிழ்கொடு துதித்துப்
பலவும் ஈசர்தம் திருப்பதி பணிந்துசெல் பவர்தாம்
அலைபு னல்திரு வழுந்தூர்மா டக்கோயில் அடைந்தார்.

- சேக்கிழார்.

நால்வர்நான்மணிமாலை

இடுகாட்டுண் மாத ரெலும்பிற் புரண்மால்
சுடுகாட்டு ளாடுவாற் சுட்டி - னொடுகாட்டுஞ்
சம்பந்தா வென்புநின்பால் தந்தாக்கிக் கொண்டிலனென்
கும்பந்தா மென்னுமுலைக் கொம்பு.

- சிவப்பிரகாச சுவாமிகள்.