943. நெடியார் சிறிதாய நிரம்பா மதிசூடும்
முடியர் விடையூர்வர் கொடியர்
மொழிகொள்ளார்
கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட
அடியர் வடுகூரி லாடும் மடிகளே. 7
944. பிறையு நெடு நீரும் பிரியா
முடியினார்
மறையும் பலபாடி மயானத் துறைவாரும்
பறையு மதிர்குழலும் போலப் பலவண்டாங்
கறையும் வடுகூரி லாடும் மடிகளே. 8
945. சந்தம் மலர்வேய்ந்த சடையின் னிடைவிம்மு
கந்தம் மிகுதிங்கட் சிந்து கதிர்மாலை
____________________________________________________
7. பொ-ரை: வடுகூரில் ஆடும் அடிகள்
பேருருவம் கொள்பவர். சிறிதான கலைநிரம்பாத
பிறை மதியைச் சூடும் முடியை உடையவர். விடையை ஊர்ந்து
வருபவர். கொடியவர் மொழிகளை ஏற்றுக் கொள்ளாதவர்.
கொல்லும் தொழிலைச் செய்யும் காலன் மடியுமாறு
உதைத்தருளிய திருவடியினர்.
கு-ரை: நெடியர், சிறுமதிசூடும் முடியர்,
விடையூர்வர், கொடியர் மொழிகொள்ளாதவர், காலனையுதைத்த
அடியவர் வடுகூரில் ஆடும் அடிகள் என்கின்றது. நிரம்பா
மதி - இளம்பிறை. கடிய தொழில் - கொடுந்தொழில்.
8. பொ-ரை: அதிர்கின்ற பறையும் வேய்ங்குழலும்
போலப் பல வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய
வடுகூரில் ஆடும் அடிகள், இளம் பிறை, பெருகிய கங்கை
நீர் ஆகியன பிரியாத திருமுடியை உடையவர், வேதங்களில்
உள்ள சந்தங்கள் பலவற்றையும் பாடிக்கொண்டு இடுகாட்டில்
உறைபவர்.
கு-ரை: கங்கையும் பிறையும் பிரியா
முடியாரும், வேதம் பலபாடி மயானத்துறைவாரும் வடுகூரில்
ஆடும் அடிகள் என்கின்றது. நெடுநீ் - கங்கை. பறையும்
குழலும் போலப் பல வண்டு ஆங்கு அறையும் எனப்
பிரிக்க.
9. பொ-ரை: அழகு தண்மை ஆகியவற்றை
உடைய வடுகூரில் ஆடும் அடிகள் அழகிய மலர்கள் வேய்ந்த
சடையின்கண் பெருகி எழும் மணம் மிகும் பிறை மதி
வெளியிடும் கிரணங்களை உடைய
|