88. திருஆப்பனூர்
பதிக வரலாறு:
திருப்பரங்குன்றை வணங்கியபின் திருஞானசம்பந்தப்
பிள்ளையார் ஆப்பனூரை அணைந்து வணங்கி ‘முற்றுஞ்
சடைமுடி’ என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள்.
பண் : குறிஞ்சி
பதிக எண்: 88
திருச்சிற்றம்பலம்
948. முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா விளம்பிறையன்
ஒற்றைப் படவரவ மதுகொண் டரைக்கணிந்தான்
செற்றமில் சீரானைத் திருவாப்ப னூரானைப்
பற்று மனமுடையார் வினைப்பற் றறுப்பாரே.
1
949. குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
அரவ மணிந்தானை யணியாப்ப னூரானைப்
பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 2
____________________________________________________
1. பொ-ரை: முடியைச் சூழ்ந்துள்ள
சடையின்மேல் வளராத இளம் பிறையைச் சூடியவனும்,
ஒருதலைப் படத்தோடு கூடிய பாம்பை இடையில் கட்டியுள்ளவனும்,
வெறுத்தற்கியலாத புகழானும் ஆகிய திருஆப்பனூர்
இறைவனைப் பற்றும் உள்ளமுடையோர் வினைத்தொடர்ச்சி
நீங்கப் பெறுவர்.
கு-ரை: இப்பதிகம் ஆப்பனூரானைப்
பணிவார், பரவுவார், புகழ்வார், வினைப்பற்றறுப்பர்
என்கின்றது. ‘முற்றும் சடை முதிரா இளம்பிறை’ என்பதில்
பொருள்முரண் உள்ளது. செற்றம் - கோபம்.
2. பொ-ரை: குராமலர் மணம் கமழும்
கூந்தலையுடைய உமையம்மை விளங்கும் திருமேனியோடு தேவர்கள்
கூடி வணங்கத் திருஆப்பனூரில் விளங்கும் சிவபிரானைப்
பரவும் மனம் உடையவர் வினைத் தொடர்ச்சி நீங்கப்
பெறுவர்.
கு-ரை: குரவம் கமழ்குழலாள் - குராமலர்
மணக்கும் கூந்தலை
|