பக்கம் எண் :

 90. திருப்பிரமபுரம்937


90. திருப்பிரமபுரம்

பதிக வரலாறு:

இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருபெயர்களைக் குறிப்பிட்டு அருளிச் செய்யப்பட்டுள்ளது.

திருவிருக்குக்குறள்

பண்: குறிஞ்சி

பதிக எண்: 90

திருச்சிற்றம்பலம்

969. அரனை யுள்குவீர், பிரம னூருளெம்
பரனையே மனம், பரவி யுய்ம்மினே. 1

970. காண வுள்குவீர், வேணு நற்புரத்
தாணு வின்கழல், பேணி யுய்ம்மினே. 2

971. நாத னென்பிர்காள், காத லொண்புகல்
ஆதி பாதமே, ஓதியுய்ம்மினே. 3

_________________________________________________

1. பொ-ரை: சிவபிரானைச் சிந்தித்துப் போற்ற விரும்பும் அன்பர்களே, பிரமனூரில் விளங்கும் பரனையே மனத்தால் பரவிப் போற்றி உய்வீர்களாக.

கு-ரை: சிவபெருமானைச் சிந்திப்பவர்களே, பிரமபுரத்தில் உள்ள பரமனைப் பரவி உய்யுங்கள் என்கின்றது.

2. பொ-ரை: சிவபிரானைக் கண்டு தொழ எண்ணும் அன்பர்களே, வேணுபுரத்தில் விளங்கும் தாணுவின் திருவடிகளைப் பேணி உய்வீர்களாக.

கு-ரை: காண உள்குவீர் - தரிசிக்க எண்ணுபவர்களே. வேணுபுரம் - சீகாழி. தாணு - சிவபெருமான்.

3. பொ-ரை: சிவபெருமானை எம் தலைவன் எனக் கூறும் அன்பர்களே! அன்போடு ஒளி விளங்கும் புகலிப் பதியில் விளங்கும் ஆதியின் திருவடிப் பெருமைகளை ஓதி உய்வீர்களாக.