983. துன்பந் துடைப்பீர்கள், அன்ப னணியாரூர்
நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே. 3
984. உய்ய லுறுவீர்காள், ஐய னாரூரைக்
கையி னாற்றொழ, நையும் வினைதானே. 4
____________________________________________________
அறவன் - தருமவடிவன். மறவாது ஏத்துமின் -
நினைப்பின்றி நினைத்து வழிபடுங்கள். நெஞ்சொடு
படாத செயலும் உண்டன்றே! அங்ஙனன்றிப் புத்திபூர்வமாக
வழிபடுங்கள். துறவியாகும் - பிறவிக்கு ஏதுவாகிய பற்றுள்ளங்கழியும்
என்பதாம். மறங்கடிய அறவனாலன்றியாகாது என்பது
உணரக்கிடக்கின்றது. துறவி - துறவு. வி, தொழில் விகுதி.
3. பொ-ரை: துன்பங்களைத் துடைத்துக்
கொள்ள விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளிய
அன்பு வடிவான இறைவனை நல்ல பொலிவுடைய மலர்களைத்
தூவி வழிபடுங்கள். துன்பம் நீங்குவதோடு இன்பம்
உளதாம்.
கு-ரை: பிறந்தார் உறுவது பெருகிய துன்பமாதலின்
அதனைத் துடைக்க வேண்டும் என்பதும், அதற்கு உபாயம்
மலர் தூவலே என்பதும் உணர்த்துகின்றது இப் பாடல்.
அன்பன் - சிவன். அன்பனணி யாரூர் - அன்பனால்
அழகு பெறும் ஆரூர். பொன்மலர் தூவ என்பது செம்பொன்னும்
வெண்பொன்னுமாகிய இரண்டாலும் பூக்கள் செய்து அவற்றை
முல்லை மலரோடு கலந்து தூவுதல் மரபு. இன்பம் ஆகும் -
துன்பநீக்கத்திற்குத் தொழுத உங்கட்கு இன்பமும்
ஆகும் என்பதாம். இன்பம் என்றது இம்மையின்பத்தையும்
நிரதிசயா நந்தப் பேரின்பத்தையும்.
4. பொ-ரை: உலக வாழ்க்கையிலிருந்து
கடைத்தேற விரும்புகின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய
தலைவனாகிய இறைவனைக்கைகளைக் கூப்பி வணங்குங்கள்.
உங்கள் வினைகள் மெலிவடையும். உய்தி பெறலாம்.
கு-ரை: இப்பாடல், துன்பந் துடைத்து உய்தியை
விரும்புவீராயின் கைகளால் தொழுங்கள் என்றருளிச்
செய்கின்றது.
ஐயன் - தலைவன். வினை தானே நையும் என்றது
தொழு
|