985. பிண்ட மறுப்பீர்காள், அண்ட னாரூரைக்
கண்டு மலர்தூவ, விண்டு வினைபோமே. 5
986. பாச மறுப்பீர்காள், ஈச னணியாரூர்
வாச மலர்தூவ. நேச மாகுமே. 6
____________________________________________________
வாரிடம் இருப்புக்கொள்ள இடமின்மையால்
வல்வினைகள் மெலிந்துபோம் என்பதாம். வினை உண்டாலன்றிக்
கழியாதாகலின் நையும் என்றார்.
5. பொ-ரை: மீண்டும் பிறவா நிலையைப்
பெற விரும்புகின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய
அனைத்துலக நாயகனாகிய இறைவனைச் சென்று கண்டு மலர்
தூவி வழிபடுங்கள். பிறப்புக்குக் காரணமான வினைகள்
விண்டுபோம். பிறவா நிலை எய்தலாம்.
கு-ரை: கீழைத்திருப்பாட்டு பிராரத்தவினை
நைந்துபோம் என்றது; இத் திருப்பாட்டு வரக்கடவ
வினைகளும் விண்டுபோம் என்கின்றது.
பிண்டம் - கருவில் உறுப்பு நிரம்பாதிருக்கும்
தசைத்திரள், ‘சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்‘
என்பது புறநானூறு. பிண்டம் அறுப்பீர்காள் - மீண்டும்
விளையும் கருவிடைப் பிண்ட நிலையை அறுப்பவர்களே!
அண்டன் ஆரூர் என்றது தேவலோகத்தில் எழுந்தருளியிருந்ததை
மனங்கொண்டு கூறியது. அண்டன் - தேவன். வினை விண்டுபோம்
- வினைகள் மீண்டும் அங்குரியாதவாறு கெடும். நெல்
வாய்விண்டது என்பதுபோல.
6. பொ-ரை: உயிரோடு பிணைந்துள்ள பாசம்
அகல வேண்டுமென விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில்
எழுந்தருளியுள்ள ஈசனை மணம் பொருந்திய மலர்களைத்
தூவி வழிபடுங்கள். உம்பால் அவனது நேசம் உளதாகும்.
பாசம் அகலும்.
கு-ரை: கீழைத்திருப்பாட்டு வினைநீக்கங்
கூறியது. அவ்வினையோடு ஒருங்கு எண்ணப் பெறுவதாய்,
அநாதியே பந்தித்துள்ள பாசமுங் கெடும்; இறைவன் நேசமாகும்
என்று சொல்கிறது இப்பாட்டு பாசம் - ஆணவம். கட்டி
நிற்பதாகலின் அதனையறுக்கவேண்டுமாயிற்று. ஆன்ம
அறிவைப் பந்தித்து அடக்கி நிற்றலின் பாசம்
எனப் பெற்றது. நேசமாகுமே என்பதையுற்று நோக்குகின்ற
எம்போலியர்க்கு.
|