1032. எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார்
மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே.
8
1033. இருவர்க் கெரியாய, உருவ மருதரைப்
பரவி யேத்துவார், மருவி வாழ்வரே. 9
1034. நின்றுண் சமண்தேரர், என்று மருதரை
அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே. 10
1035. கருது சம்பந்தன், மருத ரடிபாடிப்
பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே.
11
திருச்சிற்றம்பலம்
___________________________________________________
8. பொ-ரை: கயிலை மலையை எடுத்த
இராவணனின் தோள்களை நெரித்த மருதவாணருக்குச்
சூட்டுவதற்கு மலர் தொடுத்தவர்கள். பிறவிக்குக்
காரணமான ஆசையை விடுத்தவர்களாவர்.
கு-ரை: எடுத்தான் - கைலையைத் தூக்கிய
இராவணன், வேட்கை - பொருள்கள்மேல் தோன்றும்
பற்றுள்ளம்.
9. பொ-ரை: திருமால் பிரமர் அடிமுடி
அறிய முடியாதவாறு எரி உருவமாய் நின்ற மருதவாணரைப்
புகழ்ந்து ஏத்தித் துதிப்பவர் எல்லா
நலன்களோடும் மருவி வாழும் வாழ்க்கையைப்
பெறுவர்.
கு-ரை: இருவர்க்கு - அயனுக்கும்
மாலுக்கும். மருவி - எல்லாவற்றொடும் பொருந்தி.
10. பொ-ரை: நின்றுண்ணும் சமணரும்,
புத்தரும் எக்காலத்தும் இடைமருது இறைவனாகிய
சிவபெருமானை மாறுபட்ட உரைகளால் கூறுவதால் அவர்
எக்காலத்தும் நல்லனவே கூறார்.
கு-ரை: சமணரும் புத்தரும் என்றைக்கும்
மருதப் பெருமானை அன்றிப் பிறவற்றைப் பேசுவதால்
நல்லதைச் சொல்லமாட்டார்கள்.
11. பொ-ரை: இறைவன் திருவருளையே
கருதும் ஞானசம்பந்தன் மருதவாணரின் திருவடிகளைப்
பெரிதும் போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை
ஓதுபவர்க்குத் துன்புறுத்திய வினைகள் போகும்.
கு-ரை: பொருதவினை - இதுவரையில்
வருத்திவந்த வினை.
|