1039. பத்த ராயினீர், அத்த ரன்னியூர்ச்
சித்தர் தாள் தொழ, முத்த ராவரே. 4
1040. நிறைவு வேண்டுவீர், அறவ னன்னியூர்
மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே. 5
1041. இன்பம் வேண்டுவீர், அன்ப னன்னியூர்
நன்பொ னென்னுமின், உம்பராகவே. 6
1042. அந்த ணாளர்தம், தந்தை யன்னியூர்
எந்தை யேயெனப், பந்த நீங்குமே. 7
____________________________________________________
அன்னியூரில் விளங்கும் ஒளி
வடிவினனாகிய சிவபிரான் திருநாமங்களையே ஓதி
உய்வீர்களாக.
4. பொ-ரை: இறைவனிடம் பத்திமை
பூண்டவர்களே, தலைமையாளனாய் அன்னியூரில்
விளங்கும் ஞானவடிவினனின் திருவடிகளைத்
தொழுதலால் வினை மாசுகளிலிருந்து
விடுபட்டவராவீர்.
5. பொ-ரை: மனநிறைவுடன் வாழ
விரும்புகின்றவர்களே, அற வடிவினனாய் நான்கு
வேதங்களிலும் பரம்பொருளாகக் கூறப்பட்டுள்ள
அன்னியூர்ப் பெருமான் திருவடிகளுக்கு அன்பு செய்து
அவனோடு உறவு கொள்வீர்களாக.
கு-ரை: நிறைவுவேண்டுவீர் - குறைவிலா
நிறைவாக விரும்புகின்றவர்களே. அறவன் -
அறவடிவானவன்.
6. பொ-ரை: உலக வாழ்க்கையில்
இன்பங்களை எய்த விரும்பும் அடியவர்களே, அன்பனாக
விளங்கும் அன்னியூர் இறைவனை நல்ல பொன்னே என்று
கூறுமின், தேவர்களாகலாம்.
கு-ரை: உம்பராக - தேவர்களாக.
நன்பொன் என்னுமின் - நல்ல பொன் என்று
சொல்லுங்கள்.
7. பொ-ரை: அந்தணர்களின் தந்தையாக
விளங்கும் அன்னியூர் இறைவனை எந்தையே என அழைக்க
மலமாயைகள் நீங்கும்.
கு-ரை: பந்தம் - மலமாயையால்
விளைந்த கட்டு.
|