1067. நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி
நாட்காலை
ஊணாப்பகலுண் டோதுவோர்க
ளுரைக்குஞ்சொல்
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம்
பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று
சேர்மினே. 10
___________________________________________________
உயர்ந்து நின்றதை அவர்கள் தேடிக்
கண்டிலர் என்ற பெருமை உமக்கு உளதாயினும்
மலையகத்துள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய
நீண்ட சடையினை உடைய செல்வராகிய சிவபிரானே
நீர் வீடுகள் தோறும் சென்று இரப்பதைக்
கருதுகின்றீர். அயலவர் கண்டால் இதனை இகழாரோ?
கு-ரை: அயனும் மாலும் உம்மைக்
காணாவிட்டாலும் நீர் மனைதொறும் பிச்சைக்குப்
புறப்படாதீர்; உம்மை யாவரும் இகழார்கள்
என்கிறது.
அரப்பள்ளியான் - பாம்பைப்
படுக்கையாகக்கொண்ட திருமால். கரப்பு உள்ளி -
இறைவன் மறைந்திருப்பதை எண்ணி. நாடி - தேடி,
ஏதிலர் - அயலார்.
10. பொ-ரை: நாணாது உடையின்றித்
திரியும் திகம்பர சமணரும், காலையிலும்
நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும்
புத்தரும் கூறும் பழிப்புரைகளைக் கருதாது நாம்
சிறப்படைய வேண்டுமென்று விரும்பும் நீர்
எம்பெருமான் உறையும் வானளாவிய கோயிலை உடைய
சிராப்பள்ளியைச் சென்று அடைவீர்களாக.
கு-ரை: புத்தரும் சமணரும் உரைக்கும்
சொல்லைப் பேணாது பெருஞ்சிறப்பெய்த
விரும்புபவர்களே! சிராப்பள்ளி சேர்மின்
என்கின்றது.
நாணாது - வெட்கப்படாமல், கஞ்சியை
விடியலுண வாகவும், பகலிலும் உண்டு ஓதுபவர்கள்
புத்தர்கள். பேணாது. - போற்றாது உறுசீர் -
மிக்கபுகழ். சேணார் கோயில் - ஆகாயாமளாவிய
கோயில்.
|