திருஞானசம்பந்தர் புராணம்
செம்மணி
வாரி அருவிதூங்கும்
சிராப்பள்ளி மேய
செழுஞ்சுடரைக்
கைம்மலை ஈருரி
போர்வைசாத்துங்
கண்ணுத லாரைக் கழல்பணிந்து
மெய்ம்மகிழ் வெய்தி உளங்குளிர
விளங்கிய
சொற்றமிழ் மாலைவேய்ந்து
மைம்மலர்
கண்டர்தம் ஆனைக்காவை
வணங்கும் விருப்பொடு
வந்தணைந்தார்.
- சேக்கிழார்.
|