காலன்றன்னைக் காலாற்காய்ந்த
கடவுள்ளெம்
சூலபாணி நன்னகர்போலுந்
தொழுவீர்காள். 7
1076. போதும்பொன்னு முந்தியருவி
புடைசூழக்
கூதன்மாரி நுண்துளிதூங்குங்
குற்றாலம்
மூதூரிலங்கை முட்டியகோனை
முறைசெய்த
நாதன்மேய நன்னகர்போலுந்
நமரங்காள். 8
___________________________________________________
வளர்ந்துள்ள சோலைகளில் அழகிய ஆண்
மயில்கள் தத்தம் பெண் மயில்களோடு
களித்தாடுவதுமாகிய குற்றாலம், காலனைக் காலால்
கடிந்த கடவுளும் சூலத்தைக் கையில் -
ஏந்தியவனுமாகிய எம் சிவபிரான் எழுந்தருளியள்ள
நன்னகராகும்.
கு-ரை: சுனைசூழ்ந்த சோலையிலே
மயில் பெடையோடு விளையாடும் குற்றாலம்,
காலகாலனாகிய சூலபாணியின் நகர் என்கின்றது.
கோல மஞ்ஞை - அழகிய மயில்.
8. பொ-ரை: நம்மவர்களே! அருவிகள்
மலர்களையும் பொன்னையும் உந்திவந்து இரு
புறங்களிலும் குளிர்ந்த மழை போல் நுண்மையான
துளிகளை உதிர்க்கும் குற்றாலம், தன் தகுதிக்கு
மேலே செயற்பட்ட இலங்கை நகரின் புகழ் பெருக்கி
ஆளும் அரசனாகிய இராவணனைத் தண்டித்த சிவபிரான்
எழுந்தருளிய நல்ல நகராகும்.
கு-ரை: பூக்களையும் பொன்னையும்
உந்தி அருவி புடைசூழ நுண்துளி வீசுங் குற்றாலம்
இலங்கை நாதனையடக்கிய இறைவன் நகர் என்கின்றது.
மீதூர் எனவும் பாடம். கூதல் மாரி -
குளிர்ந்த மழை.
|