பக்கம் எண் :

988திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1079. மாடவீதி வருபுனற்காழி

யார்மன்னன்

கோடலீன்று கொழுமுனைகூம்புங்

குற்றாலம்

நாடவல்ல நற்றமிழ்ஞான

சம்பந்தன்

பாடல்பத்தும் பாடநம்பாவம்

பறையுமே. 11

திருச்சிற்றம்பலம்

___________________________________________________

என்கின்றது. எடுத்து ஆர்ப்ப அருந்தண்மேய - சமணர் புத்தர்கள் எடுத்து நுகர்தற்கரிய தண்மையான இறைவன் மேவிய. தண் - தண்மை; பண்பு தண்மையையுடைய இறைவனைக் காட்டி நின்றது.

11. பொ-ரை: மாடவீதிகளையுடையதும் ஆற்று நீர்வளம் மிக்கதுமான சீகாழிப் பதிக்கு மன்னனும் பலராலும் நாட வல்லவனுமான நற்றமிழ் ஞானசம்பந்தன் செங்காந்தள் மலர்களை ஈன்று அவற்றின் கொழுவிய முனையால் கை குவிக்கும் குற்றாலத்து இறைவர் மேல் பாடிய பாடல்கள் பத்தையும் பாடப் பாவம் நீங்கும்.

கு-ரை: குற்றாலத்தைப்பற்றி ஞானசம்பந்தன் சொன்ன பாடல் பத்தும் வல்லார் பாவம் பறையும் என்கின்றது. கோடல் - செங்காந்தள், கொழுமுனை கூம்பும் - கொழுமையான சிகரம் கூம்பியுள்ள.

சோணசைலமாலை

கூம்புறு கரமும் மலர்ந்திடு முகமும்

கொண்டுநின்றனைவலம் புரிவோர்

மேம்படு சரண மலர்ப்பொடி மேனி

மேற்படிற் பவம்பொடி படுமே

பூம்பொழிற் புகலிக்கிறைவனா னிலஞ்சேர்ப்

புண்ணியத் தலங்களி னடைந்து

தாம்புனை பதிகந் தொறும்புகழ் சோண

சைலனே கைலைநாயகனே.

- சிவப்பிரகாச சுவாமிகள்.