பக்கம் எண் :

992திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


பன்னியபாட லாடலன்மேய

பரங்குன்றை

உன்னியசிந்தை யுடையவர்க்கில்லை

யுறுநோயே. 5

1085. கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங்

கனன்மூழ்கத்

தொடைநவில்கின்ற வில்லினனந்திச்

சுடுகானில்

புடைநவில்பூதம் பாடநின்றாடும்

பொருசூலப்

படைநவில்வான்ற னன்னகர்போலும்

பரங்குன்றே. 6

____________________________________________________

பொருந்திய ஒளி வடிவினனாகிய ஈசனும், பழமையான வேதங்களில் அமைந்துள்ள பாடல்களைப் பாடி ஆடுபவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய திருப்பரங்குன்றை எண்ணிய சிந்தை உடையவர்க்கு மிக்க நோய்கள் எவையும் இல்லை.

கு-ரை: சோதி வடிவாகிய ஈசனும் வேதம் அருளிச் செய்தவனும் ஆகிய நட்டமாடியின் பரங்குன்றைத் தியானிப்பவர் கட்கு நோயில்லை என்கின்றது. பொறி - படப்பொறி. உன்னிய - தியானித்த. உறுநோய் - மிக்கநோய்.

6. பொ-ரை: வாயிலை உடைய காவல் பொருந்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் கனலில் மூழகுமாறு அம்பினை எய்த வில்லினனும், அந்திக் காலத்தில் சுடுகாட்டில் அருகில் தன்னொடு பழகிய பூதகணங்கள் பாட நின்றாடுபவனும் போர்க்கருவியாகிய சூலப்படையை ஏந்தியவனுமாகிய சிவபிரானது நன்னகர் திருப்பரங்குன்றம்.

கு-ரை: திரிபுரம் எரிய அம்புதொடுத்த வில்லினனும், பூதம் பாட இடுகாட்டில் நடமாடும் சூலபாணியுமாகிய இறைவன் நகர் பரங்குன்று என்கின்றது.

கடி அரண் - காவலோடு கூடிய அரண். தொடை - அம்பு, புடை - பக்கம். நவில்வான் - விரும்பியவன்.