|
துளங்கிளம்பி
றைச்செனித்
துருத்தியாய் திருந்தடி
உளங்குளிர்ந்த போதெலா
முகந்துகந் துரைப்பனே. 9 |
2537.
|
புத்தர்தத்
துவமிலாச்
சமணுரைத்த பொய்தனை
உத்தம மெனக்கொளா
துகந்தெழுந்து வண்டினம்
துத்தநின்று பண்செயுஞ்
சூழ்பொழில் துருத்தியெம்
பித்தர்பித்த னைத்தொழப்
பிறப்பறுத்தல் பெற்றியே. 10 |
திருவடிகளைக் காணாதவராயினர்.
ஒளி துளங்கும் இளம்பிறையைச் சூடிய
சென்னியினராய திருத்துருத்தி இறைவரே! உம் திருவடிப் பெருமைகளை
உளம் குளிர்ந்த போதெல்லாம் உவந்து உரைத்து மகிழ்கிறேன்.
கு-ரை:
கள் அம்குளிர்ந்து இலங்குபோது காதலான்-தேனுடைய
அழகிய குளிர்வுற்று விளங்கும் தாமரைப்பூவை விரும்புவன். களம்
இடமுமாம், போது ஆகிய களம், களமாகியபோது களம் போது ஆகக்
காதலிப்பவன்.
10.
பொ-ரை: புத்தர்களும் தத்துவங்கள் அற்ற நெறியாகிய
சமணமதத்தினரும் உரைத்த பொய்களை உண்மை எனக் கொள்ளாது,
வண்டினங்கள் மகிழ்வோடு எழுந்து, துத்தம் என்னும் சுருதியில் பாடும்
பைம்பொழில் சூழ்ந்த திருத்துருத்தியில் விளங்கும் பக்தர்களிடம் அன்பு
செய்யும் பரமனைத் தொழப் பிறப்பறுத்தல் பயனாய் விளையும்.
கு-ரை:
உத்தமம் எனக் கொள்ளாது மேகம் துத்தம்-ஏழிசையுள்
ஒன்றானது. பித்தர் பித்தன்:- பித்தர்க்கெல்லாம் பித்தனாயிருப்பவனைத்
தொழுதலால் பிறவிப் பெருங்கடலைத் தீர்த்தலே பெற்றிமையாகும்.
|