2538.
|
கற்றுமுற்றி
னார்தொழுங்
கழுமலத் தருந்தமிழ்
சுற்றுமுற்று மாயினா
னவன்பகர்ந்த சொற்களால்
பெற்றமொன் றுயர்த்தவன்
பெருந்துருத்தி பேணவே
குற்றமுற்று மின்மையிற்
குணங்கள்வந்து கூடுமே. 11
|
திருச்சிற்றம்பலம்
11. பொ-ரை:
கல்விகற்று நிறைவு பெற்றவர்களால் தொழப் பெறும்
கழுமலத்துள் தோன்றிய, அருந்தமிழை முற்றிலுமாக அறிந்துணர்ந்த
ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் விடைக்கொடியை
ஏந்திய சிவபிரானது திருத்துருத்தியை விரும்பி வழிபடுவோர் குற்றமற்றவர்
ஆவர். அவரிடம் நற்குணங்கள் வந்து பொருந்தும்.
கு-ரை:
சுற்றும் முற்றும் ஆயினன்-சுற்றிலும் முற்றிலும் ஆகிய
சிவபிரான். பெற்றம்-எருது எழுதிய கொடிக்கு ஆகுபெயர்.
திருஞானசம்பந்தர்
புராணம்
செழுந்திரு
வேள்விக் குடியில்
திகழ்மணவாளநற் கோலம்
பொழிந்தபுனல் பொன்னி மேவும்
புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்மையுங் கூடத்
தண்டமிழ் மாலையிற் பாடிக்
கொழுந்துவெண் திங்கள் அணிந்தார்
கோடிகாவிற் சென்றடைந்தார்.
-சேக்கிழார்.
|
|