பக்கம் எண் :

1010

2548.







தட்டொடு தழைமயிற்
     பீலிகொள் சமணரும்
பட்டுடை விரிதுகிலி
     னார்கள்சொற் பயனிலை
விட்டபுன் சடையினான்
     மேதகும் முழவொடும்
கொட்டமைந்த வாடலான்
     கோடிகாவு சேர்மினே.           10
2549.



கொந்தணி குளிர்பொழிற்
     கோடிகாவு மேவிய
செந்தழ லுருவனைச்
     சீர்மிகு திறலுடை


விடையூர்தியை உடைய வேதியனுமாகிய சிவபிரான் விரும்பும் தேன்
நிறைந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவை அடைவீர்களாக.

     கு-ரை: நோய் அடைதற்கு ஏதுவாகிய கட்டு, உடலையும் அதைச்
சார்ந்து உயிரையும் பிணித்தலால் பிணி எனப்பட்டது. பிறவிப் பிணி
அழியும் வகை சொல்வேன். திருமாலும் நான்முகனும் சென்று அளந்தும்
காணமாட்டாத பெருமையன்.

     10. பொ-ரை: தட்டோடு, தழைத்த மயிற் பீலியை ஏந்தித்திரியும் சமணர்களும், பட்டால் ஆகிய விரிந்த ஆடையைப் போர்த்த புத்தர்களும் சொல்வன பயனற்ற சொற்களாகும். தொங்க விட்ட சடையினனாய் மேதகு முழவு கொட்ட ஆடுபவனாய் விளங்கும் சிவபிரானின் கோடிகாவை அடைவீர்களாக.

     கு-ரை: சொல்லுஞ் சொல் பயனில்லை. தொங்கவிட்ட பொன்னார்
செஞ்சடை.

     11. பொ-ரை: பூங்கொத்துக்களை உடைய குளிர்ந்த பொழில்
சூழ்ந்த திருக்கோடிகாவில் எழுந்தருளிய செந்தழல் உருவனை, சிறப்புமிக்க
திறனுடைய அந்தணர்கள் வாழும் புகலியுள் தோன்றிய வேதங்களில் வல்ல
ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தமிழை வல்லவர்களின் பாவங்கள் நீங்கும்.