பக்கம் எண் :

1014

2553.







கனைகொளிருமல் சூலைநோய்
     கம்பதாளி குன்மமும்
இனையபலவு மூப்பினோ
     டெய்திவந்து நலியாமுன்
பனைகளுலவு பைம்பொழிற்
     பழனஞ்சூழ்ந்த கோவலூர்
வினையைவென்ற வேடத்தான்
     வீரட்டானஞ் சேர்துமே.           4
2554.







உளங்கொள்போக முய்த்திடா
     ருடம்பிழந்த போதின்கண்
துளங்கிநின்று நாடொறுந்
     துயரலாழி நெஞ்சமே
வளங்கொள்பெண்ணை வந்துலா
     வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விளங்குகோவ ணத்தினான்
     வீரட்டானஞ் சேர்துமே.           5


     கு-ரை: நல்ல உள்ளத்தை உடையவரே உயிர்க்கு உறுதியாவதை
அறிதிர் என்னில் திருக்கோவலூர் வீரட்டானம் சேர்வோம். அள்ளற்சேறு-
நரகம்.

     4. பொ-ரை: மூப்புக் காலத்தில் கணைத்தலைக் கொண்ட இருமல்,
சூலை நோய், நடுக்கம், குன்மம் முதலியன வந்து நலிவு செய்தற்கு முன்னே,
பனைகள் மிக்க பசிய பொழில் வயல் ஆகியன சூழ்ந்த கோவலூரில்,
இருவினைகளும் அற்ற வடிவினனாய் விளங்கும் சிவபிரானது
வீரட்டானத்தை அடைவோமாக.

     கு-ரை: கம்பதாளி-தாள்நடுங்கும் ஒருவகை நோய்; கம்பம்-நடுக்கம்;
தாளி-கால்களைப்பற்றுவது. ‘பெண்ணை’ என்றதற்கேற்ப பனந்தோப்பு
மிக்கிருக்கும் நாடு. இருவினையையும் போக்கிய சிவவேடத்தை உடையவன்.

     5. பொ-ரை: ஆழமான சிந்தனையை உடைய நெஞ்சமே! உடலற்ற
காலத்தில் மனத்தால் விரும்பியவற்றை எய்துதல் இயலாது. நாள்