பக்கம் எண் :

1016

வரைகொள்பெண்ணை வந்துலா
     வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விரைகொள்சீர்வெண் ணீற்றினான்
     வீரட்டானஞ் சேர்துமே.            7
2557.







ஏதமிக்க மூப்பினோ
     டிருமலீளை யென்றிவை
ஊதலாக்கை யோம்புவீ
     ருறுதியாவ தறிதிரேல்
போதில்வண்டு பண்செயும்
     பூந்தண்கோவலூர்தனுள்
வேதமோது நெறியினான்
     வீரட்டானஞ் சேர்துமே.            8
2558.



ஆறுபட்ட புன்சடை
     அழகனாயி ழைக்கொரு
கூறுபட்ட மேனியான்
     குழகன்கோவ லூர்தனுள்


சூழ்ந்த கோவலூரில் மணம் கமழும் சிறப்புமிக்க வெண்ணீறணிந்தவனாய்
விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தைச் சென்றடைவோம்.

     கு-ரை: உரையும் பாட்டும்-பேச்சும் பாடலும் ‘பாட்டும் உரையும்
பயிலாதன இரண்டோட்டைச் செவியும் உள’.

     8. பொ-ரை: துன்பம்மிக்க மூப்போடு இருமல் ஈளை ஆகியவற்றுக்கு
இடனாய பருத்த உடலைப் பேணித் திரிபவர்களே! உயிர்க்கு உறுதியாவதை
அறிவீராயின், மலர்களில் வண்டுகள் பண் பாடும் அழகிய கோவலூரில்,
வேதங்களை ஓதும் நெறியினன் ஆகிய சிவபிரானது வீரட்டானத்தை
அடைவோம். வருக.

     கு-ரை: ஈளை-சிலேட்டும தோடத்தால் வரும் நோய் வகையுள்
ஒன்று. ஊதல் ஆக்கை-பருத்தலையுடைய உடம்பு. உறுதி-ஆன்ம லாபம்.
அறிதிர் ஏல்-அறிவீர் எனில். வேதம் ஓதும் நெறியினான்-வேதநெறியை
அருளியவன்.

     9. பொ-ரை: கங்கை தங்கிய மென்மையான சடைகளை உடைய
அழகனும், உமையம்மைக்குத் தன் மேனியில் ஒரு கூற்றை