|
நீறுபட்ட
கோலத்தான்
நீலகண்ட னிருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான்
வீரட்டானஞ் சேர்துமே. 9 |
2559.
|
குறிகொளாழி
நெஞ்சமே
கூறைதுவரிட் டார்களும்
அறிவிலாத வமணர்சொல்
லவத்தமாவ தறிதிரேல்
பொறிகொள்வண்டு பண்செயும்
பூந்தண்கோவ லூர்தனுள்
வெறிகொள்கங்கை தாங்கினான்
வீரட்டானஞ் சேர்துமே. 10 |
அளித்தவனும் ஆகிய
குழகன் விளங்கும் கோவலூரில் நீறணிந்த
கோலத்தினனாய், நீலகண்டனாய், திருமால் பிரமர்க்கு வேறான
சிந்தையனாய் விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தை அடைவோம்
வருக.
கு-ரை:
ஆயிழை-உமாதேவியார். திருவெண்ணீறு சண்ணித்த
மேனியழகினன்.
இருவர்-மாலும்
அயனும், வேறுபட்ட சிந்தைக்கு ஏதுவாயிருந்தவன்.
அந்தணர் தம் சிந்தையானை வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற
கருத்தானை.
10.
பொ-ரை: ஆழமாகப்பலவற்றை எண்ணும் நெஞ்சமே!
துவரூட்டிய ஆடையினர்களாகிய புத்தர்களும் அறிவிலாத சமணர்களும்
கூறும் சொற்கள் பயனற்றவை ஆதலை உணர்வாயேயானால், பொறிகளை
உடைய வண்டுகள் இசைபாடும் அழகிய கோவலூரில் மணம் கமழும்
கங்கையை அணிந்த சடையினனாகிய சிவபிரானது வீரட்டானத்தை
அடைவோம் வருக.
கு-ரை:
ஆழி நெஞ்சமே நீராழங்கண்டாலும் நெஞ்சாழம்
காணமுடியாது. அவத்தம்-பொய், பொறி-வரி. வெறி-மணம்.
|