|
மறித்துமண்டு
வண்டல்வாரி
மிண்டுநீர் வயற்செந்நெல்
அறுத்தவா யசும்புபாயு
மந்தணாரூ ரென்பதே. 10 |
2571.
|
வல்லிசோலை
சூதநீடு
மன்னுவீதி பொன்னுலா
அல்லிமா தமர்ந்திருந்த
வந்தணாரூ ராதியை
நல்லசொல்லு ஞானசம்
பந்தன்நாவின் இன்னுரை
வல்லதொண்டர் வானமாள
வல்லர்வாய்மை யாகவே. 11
|
திருச்சிற்றம்பலம்
மேற்கொண்டு கண்டு
அஞ்சும் வேடமுடையவனும், நஞ்சுண்ட கண்டனும்
ஆகிய சிவபெருமான் மேவும் ஊர், மீண்டும், மீண்டும் தோன்றும்
வண்டலை வாரி நீரைத்தடுத்து, செந்நெல்லை அறுத்த வயல்களில் ஊற்று
வழியே நீர்ப்பொசிவு தோன்றும், மண்வளமும், நீர்வளமும் உடைய
திருவாரூர்.
கு-ரை:
பறிகொள்தலையினாக கடுப்படுத்த மேனி,
கடுப்பொடியுடற்கவசர். கடுவேதின்று மெய்ப்பொடியட்டி வெறித்த
வேடன்-அஞ்சிய சிவவேடமுடைய சிவபிரான். அச்சம்-நெறியல்லா நெறியிற்
செல்வதுபற்றித் தோன்றுவது. மறித்து-தடுத்து திருப்பி அசும்பு-நீர்ப்பொசிவு.
11.
பொ-ரை: கொடிகள் அடர்ந்த சோலைகளால் சூழப்பெற்று
மாமரங்களைக் கொண்டு விளங்கும் திருவீதிகளை உடைய அழகு
பொருந்திய அல்லியங்கோதையம்மையோடு எழுந்தருளி விளங்கும் ஆரூர்
இறைவனை ஞானநெறிகளை உணர்த்தும் சொற்களைக்கூறும் ஞானசம்பந்தன்
நாவினால் பாடிப் போற்றிய இன்னுரைகளை ஓதும் தொண்டர்கள் வானம்
ஆள்வர்; இஃது உண்மை.
கு-ரை:
சூதம்-மாமரம். பொன்னுலாவல்லிமாது-அல்லியங்கோதை
தேவியின் திருநாமம். நல்ல-ஞான நன்னெறியுணர்த்துஞ்
|