பக்கம் எண் :

1038

2588.

கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக்
     கனல்விடு சுடர்நாகம்
தெண்ணி லாவொடு திலதமு நகுதலை
     திகழவைத் தவர்மேய
மண்ணு லாம்பொழி லரிசிலின் வடகரை
     வருபுனன் மாகாளம்
உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ்
     வுலகினி லுயர்வரே.                6
   
2589. தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ்
     சுடர்விடு நறுங்கொன்றை
பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும்
     புகழ்புரிந் தவர்மேய


திருவருளினும் வேறுநிதியம், சுகபோகம் அடையத்தக்க வேறுகதிகள்
உலகில் உண்டோ?

     கு-ரை: நெதியம்-நிதியம். மதியம்-தோய்புனல். கதியம்-வழி.
மாகாளத்துப் பரசிவனைப் புதுப்பூக்கள் சந்தனம் தூபம் (முதலியவை)
கொண்டு ஏத்தி வழிபடும் சிவபுண்ணியத்தை உடையவர்க்கு
அச்சிவபூஜையால் எய்தும் திருவருளினும் நிதியம் சுகபோகம் வேறு
என்ன இருக்கின்றன?

     6. பொ-ரை: கதிரொளி பொருந்திய முடிமிசைப் பாம்பு திங்கள்
தலைமாலை ஆகியவற்றை அணிந்த பெருமான் எழுந்தருளிய பொழில்
சூழ்ந்த அரிசிலாற்று வடகரையில் விளங்கும் திருமாகாளத்தை உள்ளத்தே
கொண்டு வழிபடுபவர் யாவரோ? அவர் இவ்வுலகில் உயர்வெய்துவர்.

     கு-ரை: கண் உலாவிய கதிர் ஒளிமுடி:- செஞ்சடை முடியின்
ஒளியை உணர்த்திற்று. திலதம்-திலகம். வைத்தவர்-சிவபிரானார். உள்-
மனத்தில். நிலாம்-நிலாவுகின்ற.

     7. பொ-ரை: தோலே அவர் இடையில் கட்டியுள்ள ஆடையாகும்.
கொன்றையே அவர்தம் கண்ணி, பூசுவது வெண்பொடி. புகழை விரும்புபவர்.
அவர்தம் திருமாகாளத்தைப் பேசும் தன்மையர் யாவரோ அவர் இவ்வுலகில்
பெருமையைப் பெறுவர்.