|
மாசு
லாம்பொழி லரிசிலின் வடகரை
வருபுனன் மாகாளம்
பேசு நீர்மையரி யாவரிவ் வுலகினிற்
பெருமையைப் பெறுவாரே. 7 |
|
|
2590.
|
பவ்வ
மார்கட லிலங்கையர் கோன்றனைப்
பருவரைக் கீழூன்றி
எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த
விறையவ னுறைகோயில்
மவ்வந் தோய்பொழி லரிசிலின் வடகரை
வருபுனன் மாகாளம்
கவ்வை யாற்றொழு மடியவர் மேல்வினை
கனலிடைச் செதிளன்றே. 8 |
|
|
2591.
|
உய்யுங்
காரண முண்டென்று கருதுமி
னொளிகிளர் மலரோனும்
பைகொள் பாம்பணைப் பள்ளிகொ ளண்ணலும்
பரவநின் றவர்மேய |
கு-ரை:
தூசு-உடை. அரையில் தோலுடையே தூசு- கொன்றையே-
கண்ணி. பூசுவது வெண்பொடி, புரிந்தவர்-விரும்பினவர். மாசு-மேகம்.
யாவர்? அவர் பெருமை பெறுவார் என்க.
8.
பொ-ரை: கடல் சூழ்ந்த இலங்கைமன்னன் இராவணனைக்
கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி அடர்த்து, இமையவர்க்குத் துன்பங்கள்
தீர அருள் செய்தவர். அவ்விறைவர் உறையும் கோயில் அம்பர் மாகாளம்.
அத்தலத்தைத் தோத்திர ஆரவாரத்தோடு வழிபடும் அடியவர்களின்
வினைகள் அழலிற்பட்ட தூசுபோலக்கெடும்.
கு-ரை:
பவ்வம் ஆர் (கடல்)-நீர்க்குமிழி நிறைந்த; நுரையும் ஆம்.
நுரை மொக்குள் பௌவத்தோடு நொவ்விய புற்புதங்கள் திரைகொள்
நீர்க்குமிழி ஐந்தாம் (சூடாமணி நிகண்டு. 5. பெயர்ப் பிரிவு. 2.5.)
மவ்வம்-மேகம். அழகு (தோய்பொழில்) எனல் பொருந்தாது. (தமிழ்
லெக்ஸிகன, பக். 3112). கவ்வை-தோத்திர முழக்கம். தீயிற்பட்ட மரத்தூள்
போல வினை அழியும்.
9.
பொ-ரை: கடைத்தேறுதற்கு ஒருவழி உண்டென்று கருதுங்கள்.
நான்முகனும் திருமாலும் பரவ நின்றவராகிய இறைவர்
|