பக்கம் எண் :

1048

2604.









தனமலி புகழ் தயங்குபூந் தராயவர்
     மன்னன்நற் சம்பந்தன்
மனமலி புகழ் வண்டமிழ் மாலைகள்
     மாலதாய் மகிழ்வோடும்
கனமலி கட லோதம் வந்துலவிய
     கடிக்குளத் தமர்வானை
இனம லிந்திசை பாடவல் லார்கள்போ
     யிறைவனோ டுறைவாரே.           11

       திருச்சிற்றம்பலம்



உண்டகண்டரும் திரிபுண்டரம் அணிந்த நன்மேனியரும் ஆகிய
கடிக்குளத்தில் உறையும் எம் ஈசர்தம் தொண்டர் தொண்டரைத்
தொழுது அடிபணிமின் தூய சிவநெறி எளிதாம்.

     கு-ரை: குறி-குறிக்கோள். தொண்டர் தொண்டர்-தொண்டர்க்குத்
தொண்டர். தூநெறி-திருநெறி, சிவநெறி.

     11. பொ-ரை: செல்வவளம் மிக்க புகழ் விளங்கும் பூந்தராய்
மக்களின் மன்னனாகத்திகழும் ஞானசம்பந்தன் மனநிறைவோடு
புகழ்ந்துரைத்த வண்டமிழ் மாலைகள் மீது அன்பு கொண்டு, மகிழ்வோடு,
கடல்ஓதம் வந்துலவும் கடிக்குளத்து அமரும் இறைவனை அடியவர்களோடு
கூடி அவற்றை இசையோடு பாடவல்லார்கள் போய் இறைவனோடு
உறைவார்கள்.

     கு-ரை: செல்வமும் மிக்க புகழும்: மாலது-அன்பு. கனம்-மேகம்.
இனம்-அடியார்கூட்டம்.

திருஞானசம்பந்தர் புராணம்

கண்ணார்ந்த திருநுதலார் மகிழ்ந்தகடிக் குளமிறைஞ்சி
எண்ணார்ந்த திருவிடும்பா வனமேத்தி எழுந்தருளி
மண்ணார்ந்த பதிபிறவும் மகிழ்தரும்அன் பால்வணங்கிப்
பண்ணார்ந்த தமிழ்பாடிப் பரவியே செல்கின்றார்.
                                         -சேக்கிழார்.