பக்கம் எண் :

1049

105. கீழ்வேளூர்

பதிக வரலாறு:

     நாகைக் காரோணத்தை வழிபட்டுவருங் காழிவேந்தர் கீழ்வேளூர்
விமலரையுந் தரிசித்துப் பாடியது இத்திருப்பதிகம்.

                   பண்: நட்டராகம்

ப.தொ.எண்: 241   பதிக எண்: 105

                   திருச்சிற்றம்பலம்

2605.







மின்னு லாவிய சடையினர் விடையினர்
     மிளிர்தரு மரவோடும்
பன்னு லாவிய மறையொலி நாவினர்
     கறையணி கண்டத்தர்
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர்
     புகழ்மிகு கீழ்வேளூர்
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை
     யோடிட வீடாமே.             1
2606.



நீரு லாவிய சடையிடை யரவொடு
      மதிசிர நிரைமாலை
வாரு லாவிய வனமுலை யவளொடு
      மணிசிலம் பவையார்க்க


     1. பொ-ரை: மின்னலைப்போல ஒளிவிடும் சடையினரும்,
விடைஊர்தியரும், அரவாபரணரும் இசையமைப்புடைய வேதங்களை
ஓதிய நாவினரும், நீலகண்டரும் பொன்போன்ற கொன்றைத் தாரினரும்
ஆகிய புகழ்மிக்க கீழ்வேளூர் இறைவரை நினைக்கும் நெஞ்சினர்க்கு
வினைகள் நீங்க வீடு கிட்டும்.

     கு-ரை: உன்-உன்னுதல். திருக்கீழ்வேளூரை நினைப்பவர்க்கு
வினையில்லை. வீடுண்டு என்று அருளியது, இவ்வூர்ப்பெருமான்
திருப்பெயர் கேடிலியப்பர் என்பதன் உண்மைப் பொருளை உலகோர்க்கு
உணர்த்துவதாகும்.

     2. பொ-ரை: கங்கை சூடிய சடையின்கண், அரவு, மதி, தலைமாலை
ஆகியவற்றை அணிந்து, கச்சணிந்த தனங்களை உடைய