|
செஞ்சொலார்பலர்
பரவிய தொல்புகழ்
மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின்
நடலைகள் நணுகாவே.
9 |
2614.
|
சீறு
லாவிய தலையினர் நிலையிலா
வமணர்கள் சீவரார்
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின்
சுரும்பமர் கீழ்வேளூர்
ஏறு லாவிய கொடியனை யேதமில்
பெருந்திருக் கோயின்மன்னு
பேறு லாவிய பெருமையன் றிருவடி
பேணுமின் தவமாமே. 10
|
இயலாதவனும், பஞ்சு
போன்ற மென்மையான அடிகளை உடைய பார்வதி
பாகனும், செஞ்சொற் புலவோர் பரவும் புகழ்மிக்க கீழ் வேளூரில் விளங்கும்
நஞ்சணிந்த கண்டனும் ஆகிய பெருமானைச் சென்றடையுங்கள். துன்பங்கள்
நம்மை அடையா.
கு-ரை:
கடல்-பாற்கடல். காண்பு-பார்வை. காண்பினொடு
நேத்திரங்கள் பணித்தருள வேண்டும் கண்கள் காண்பு ஒழிந்து 2.97-5.
10.
பொ-ரை: மழித்த தலையினரும், நிலையற்ற சொல் செயல்
உடையவரும் துவரூட்டிய ஆடையரும் ஆகிய சமண புத்தர்களின்
பெருமையற்ற சொற்களை விரும்பாதீர்; வண்டுகள் ஒலிக்கும் சோலைகள்
சூழ்ந்த கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விடைக்கொடியனாய் விளங்குபவனும்
அந்தமில்லாத ஆனந்தத்தை அருளும் பெரியவனுமாகிய சிவபெருமான்
திருவடிகளை வழிபடுங்கள். அதுவே சிறந்த தவமாகும்.
கு-ரை:
சீறு-முதனிலைத் தொழிலாகுபெயர். சீவரார்-துவரூட்டிய
சீலையர் (தேரர்). வீறு-பெருமை, வெற்றியுமாம். பேறு-ஆன்மாக்களுக்குரிய
பேறு (சிவானந்தம்). பேறு உலாவிய பெருமையன். ஆனந்தம் நிகழும்
பெருமையையுடைய பரமசிவன்.
|