2615.
|
குருண்ட
வார்குழற் சடையுடைக் குழகனை
யழகமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக்
கோயிலெம் பெருமானை
இருண்ட மேதியி னினமிகு வயன்மல்கு
புகலிமன் சம்பந்தன்
தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி
பெறுவது திடமாமே.
11
|
திருச்சிற்றம்பலம்
11.
பொ-ரை: கடைசுருண்ட சடையினனும், இளைஞனும் அழகிய
கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விளங்குபவனும் ஆகிய பெருமான் மீது
கரிய எருமைகள் மிக்கதும், வயல்கள் நிறைந்ததுமாகிய புகலியின்மன்னன்
ஞானசம்பந்தன் அருளிய தெளிந்த பாடல்களை ஓதுவர் சிவகதி பெறுதல்
உறுதி.
கு-ரை:
குருண்டவார் குழற்சடைக் குழகன்-குருள்குஞ்சி
(தி.2 ப.116 ப.4) குழகன்-இளையன்; அழகன். புகலி-சீகாழி. மன்-இறைவன்.
தெருண்ட-தெளிந்த.
திருஞானசம்பந்தர்
புராணம்
கழிக்கானல்
மருங்கணையுங் கடல்நாகை
யதுநீங்கிக் கங்கை யாற்றுச்
சுழிக்கானல் வேணியர்தம் பதிபலவும்
பரவிப்போய்த் தோகை மார்தம்
விழிக்காவி மலர்பழனக் கீழ்வேளூர்
விமலர்கழல் வணங்கி ஏத்தி
மொழிக்காதல் தமிழ்மாலை புனைந்தருளி
அங்ககன்றார் மூதூர் நின்றும்.
-சேக்கிழார்.
|
|