பக்கம் எண் :

1062

2625.







அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர்
     தவம்புரிந் தவஞ்செய்வார்
நெறிய லாதன கூறுவர் மற்றவை
     தேறன்மின் மாறாநீர்
மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி
     மருவிய பெருமானைப்
பிறிவி லாதவர் பெறுகதி பேசிடி
     லளவறுப் பொண்ணாதே.      10
2626.



மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய
     மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய்
     நவிற்றிய தமிழ்மாலை


மழலை வீணையர்-‘மிக நல்ல வீணைதடவி’, பாதத்தால் சுழலும்
மாந்தர்கள் - திருக் கோயிலை வலம் வரும் அன்பர்கள். தொல்வினை-
சஞ்சித கர்மம்.

     10. பொ-ரை: அறிவில்லாத சமணரும் சாக்கியரும் தவம் புரிந்து
கொண்டே அவம்பல செய்கின்றனர். அவர் கூறும் நெறியலா உரைகளைக்
கேளாதீர். வலஞ்சுழி இறைவனைப் பிரியாத அடியவர் பெறும் கதிகளைப்
பேசினால் வரும் பயன்கள் அளத்தற்கு அரியனவாகும்.

     கு-ரை: தவம் புரிந்து அவம் செய்தல்-மேற்கொண்ட தவத்திற்கு
ஒவ்வாத பாவச்செய்கையை உடையராதல். நெறி அல்லாதவற்றைப்
போதிப்பர். தேறல்மின்-தெளியத்தக்கன அல்ல என்று தெளியாது ஒழிமின்.
பிறிவு இல்லாதவர்- இடைவிடாமல் வழிபடும் அடியர்.

     11. பொ-ரை: மாதொருகூறனை, திருவலஞ்சுழியில் விளங்கும்
மருந்து போல்வானை, காழி ஞானசம்பந்தன் பாடி ஏத்திய
இத்திருப்பதிகத்தை அன்போடு இசைகூட்டிப் பாடுவார். அதனைக்
கேட்பார் ஆகிய அடியவர்களை வினைகள் சாரா. இம்மை, மறுமை
எப்போதும் வருத்தம் வந்து அவர்களை அணுகா.

     கு-ரை: கூறன்-பாகத்தன். மருந்து-பிறவிநோய் தீர்க்கும்