2637.
|
மாடெ லாமண
முரசெனக் கடலின
தொலிகவர் மாதோட்டத்
தாட லேறுடை யண்ணல் கேதீச்சரத்
தடிகளை யணிகாழி
நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல்
நவின்றெழு பாமாலைப்
பாட லாயின பாடுமின்ப த்தர்கள்
பரகதி பெறலாமே. 11
|
திருச்சிற்றம்பலம்
நின்றுண்ணும் மரபினர்களாகிய
சமணரும், கூறும் அறியாமை உரைகளைக்
கேளாதீர். மதம் பொருந்திய யானையை அஞ்சுமாறு செய்து அதன் தோலை
உரித்துப் போர்த்தவர் ஆகிய, மாதோட்டத்துள் பாலாஒவியின் கரைமேல்
விளங்கும் கேதீச்சரத்து அத்தரை அடையுங்கள்.
கு-ரை:
ஆதர்-அறிவிலார், எத்தர்-ஏமாற்றுவோர், விரகுள்ளவர்,
ஏழைமை-அறியாமை தோற்றும் சொற்கள். மறுகிட-கலங்க. பாலாவி-
அத்தலத்தின் தீர்த்தம். அது மிகப்பெரியது.
11.
பொ-ரை:
அருகிலெல்லாம் மணமுரசு ஒலிப்பதுபோலக் கடல்
ஒலி நிரம்பப் பெற்றமாதோட்டத்தில், வலிய ஏற்றினை உடைய
தலைவராகிய கேதீச்சரத்துப் பெருமானை அழகிய காழி நாட்டினர்க்குத்
தலைவனாகிய ஞானசம்பந்தன் சொல் நவின்றதால் தோன்றிய
இப்பாமாலையைப் பக்தர்களே! பாடி வழிபடுமின். பரகதி பெறலாம்.
கு-ரை:
மணமுரசு:- வீரமுரசு, தியாகமுரசு, என்னும் மூவகையுள்
ஒன்று. இமிழ்குரல் முரசம் மூன்று உடன் ஆளும் தமிழ்கெழுகூடல்
தண்கோல்வேந்து (புறம் 58) வம்மின் எனப்புலவோரை அளித்திடுவண்
கொடைமுரசு. . . மணமுரசு. . . திறல்முரசு (முத்துக்குமாரசுவாமி
பிள்ளைத்தமிழ். 8) ஆடல்-வெற்றி. காழிநாடுளார்க்கினற ஆசிரியர்.
பரகதி-சிவானந்தப் பேறு அடையும் நெறி.
|