|
வெடிய
வல்வினை வீட்டுவிப் பானுறை
விற்குடி வீரட்டம்
படிய தாகவே பரவுமின் பரவினாற்
பற்றறும் அருநோயே.
5 |
2643.
|
பெண்ணொர்
கூறினர் பெருமையர் சிறுமறிக்
கையினர் மெய்யார்ந்த
அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர்
அரியவர் அல்லார்க்கு
விண்ணி லார்பொழின் மல்கிய மலர்விரி
விற்குடி வீரட்டம்
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக்
கிடர்கள்வந்
தடையாவே.
6
|
|
*
* * * * * * * * 7
|
கு-ரை:
ஏற்றினர்-எருதுடையவர். கனல் அன்ன மேனியர்:-
தீவண்ணர் திறம் ஒருகால் செப்பாராகில், ஊர் மூன்றும்-திரிபுரங்களும்.
வரை-மேரு. வெடிய-பகையாகிய, கேடாகிய அச்சத்தினைச் செய்யும்-
வீட்டுவிப்பான்- கொல்விப்பவன். படி-பண்பு. நோய் பற்று அறும்.
6.
பொ-ரை: மாதொருபாகத்தர். பெருமை உடையவர்.
சிறியமான்
கன்றை ஏந்திய கையினர். உண்மையான தலைவர். அன்பு செய்பவர்க்கு
எளியவர். அல்லாதவர்க்கு அரியவர். அவர் உறையும் இடமாகிய,
விண்ணுறஓங்கிய மலர்மல்கிய பொழில்கள் சூழ்ந்த விற்குடி வீரட்டத்தை
எண்ணிய சிந்தையர்க்கு இடர்கள் வந்தடையா.
கு-ரை:
கூறு-பாகம், மறி-மான். அன்பர்க்கு எளியவர் அல்லார்க்கு
அரியவர். அளவறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு, அடியவர்க்கு
எளியான் மெய்யடியவர்க்கு எண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு,
(திருவாசகம்) விண்ணில் ஆர் பொழில் என்க. எண்-எண்ணுதல்.
7.
* * * * * * * *
|