பதிக வரலாறு:
சண்பை
வேந்தர் மொழி வேந்தரோடு கூடியிருந்து, வற்கடம்போக்கி நாட்டை வாழ்வித்த பின்னர்,
திருவாஞ்சியம் முதலியவற்றைப்போற்றிக்
கோட்டூரில் ஏத்திப்பாடியது இத்திருப்பதிகம்.
பண்:
நட்டராகம்
ப.தொ.எண்:
245 |
|
பதிக
எண்: 109 |
திருச்சிற்றம்பலம்
2648.
|
நீல
மார்தரு கண்டனே நெற்றியோர்
கண்ணனே யொற்றைவிடைச்
சூல மார் தரு கையனே துன்றுபைம்
பொழில்கள் சூழ்ந்தழகாய
கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
சால நீடல மதனிடைப் புகழ்மிகத்
தாங்குவர் பாங்காவே.
1 |
1. பொ-ரை:
நீலகண்டனே, நெற்றிக்கண்ணனே, ஒற்றைவிடை
மீது ஏறி வருபவனே, முத்தலைச்சூலம் ஏந்திய கையனே, செறிந்த
பொழில்களால் சூழப்பட்டதும் அழகிய மலர்களின் மணம் கமழ்வதுமாகிய
கோட்டூரில் விளங்கும் கொழுந்தே என்றுகூறி அவனை வணங்க எழுபவர்
மிகப்பெரிதாய சிவலோகத்தில் பெருமானுக்கு அருகில் புகழ் பெறத்
தங்குவர்.
கு-ரை: நீலம்-நீலநிறமுடைய ஆலகாலவிடம்.
கோலம்-அழகு.
கொழுந்து என்பது இறைவன் திருப்பெயர். சாலநீள் தலம்-சிவலோகம்.
|